இந்தியா

குஜராத் சாலை விபத்தில் 10 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் அண்டை மாவட்டமான சுந்தர்நகரின் சோட்டிலா பகுதிக்கு சென்றுவிட்டு மினி லாரியில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ராஜ்கோட்– அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பகோதரா என்ற கிராமத்துக்கு அருகில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரியின் பின்னால் மினி லாரி மோதியது. இதில் 5 பெண்கள், 3 குழந்தைகள், 2 ஆண்கள் என 10 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். தகவலறிந்த போலீஸார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT