டிக்கெட் கேட்டதால் ஆத்திரமுற்று ஓடும் ரயிலில் இருந்து பெண் பரிசோதகரை கீழே தள்ளினர் பயணிகள். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை ஹைதராபாத் அருகே நிகழ்ந்தது.
ஆந்திர மாநிலம் ஹஃபீஸ் பேட்டையில் இருந்து செகந்திராபாத் சென்ற ரயிலில், வெள்ளிக்கிழமை காலை, டிக்கெட் பரிசோதகர் கீதா பயணிகளிடம் டிக்கெட் சோதனை நடத்தினார்.
லிங்கம்பள்ளி என்ற இடத்தில் ரயில் சென்றபோது, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த சிலரிடம் கீதா, அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த பயணி கள், கீதாவை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த கீதா உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.