பிரதமர் மோடி 
இந்தியா

மறக்க முடியாத காலம்: எமர்ஜென்சி குறித்து பிரதமர் மோடி கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 1975-ம்ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசரநிலை பிரகடனத்தை (எமர்ஜென்சி) அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று ஜூன் 25-ம் தேதி என்பதால் எமர்ஜென்சி குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி காலம் மறக்க முடியாதது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, ஜனநாயகத்துக்கு எதிராக அறிவிக்கப்பட்டது. இருண்ட காலமாக இருந்த எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை வலுப்படுத்த போராடிய அனைத்து தலைவர்களுக்கும் தலை வணங்குகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT