இந்தியா

ஒடிசாவில் 82 உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசாவின் பாலசோர் மாவட் டத்தில் கடந்த 2-ம் தேதி நடந்த ரயில் விபத்தில் 288 பேர் உயரிழந்தனர். விபத்து நிகழ்ந்து ஒரு வாரத்துக்குப் பிறகும் இன்னும் 82 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் நேற்று முன்தினம் கூறும்போது, “பெரும்பாலான சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவு சிதைந்துள்ளன. எனவே டிஎன்ஏ அறிக்கைக்காக உறவினர்கள் காத்தி ருக்கின்றனர்” என்றனர்.

இதற்கிடையில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் புவனேஸ்வர் எய்ம்ஸ் அதிகாரிகளை சந்தித்தார். அப் போது உடல்களை அடையாளம் காணும் நடைமுறை குறித்து அவர்களிடம் ஆலோசித்தார்.

SCROLL FOR NEXT