இந்தியா

10 நிமிட டெலிவரி இனி இல்லை: ஜெப்டோ, சோமாட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் முடிவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தங்​களது பணி​யாளர்​கள் மீதான அழுத்​தத்தை போக்கும் வகை​யில் 10 நிமிடங்​களுக்​குள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்​களை கொண்டு சேர்க்​கும் திட்டத்தை ஜெப்​டோ, சோமாட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்​ளன.

ஆன்​லைன் உணவு விநியோக நிறு​வனங்​கள் அதிக அளவில் வாடிக்​கை​யாளர்​களை கவரு​வதற்​காக விரைவு டெலிவரி திட்டங்களை செயல்​படுத்தி வரு​கின்​றன. அந்த வகை​யில், 10 நிமிடங்​களில் பொருட்​களை வாடிக்​கை​யாளர்​களிடம் கொண்டு சேர்க்​கும் திட்​டம் வாடிக்​கை​யாளர்​களிடையே மிக பிரபல​மாக உள்ளது.

ஆனால், இந்த திட்​டம் டெலிவரி சேவை​யில் ஈடு​பட்​டுள்ள பணியாளர்​களின் மீது அழுத்​தத்தை ஏற்​படுத்​து​வதுடன் அவர்களுக்கு பாது​காப்பு இல்​லாத சூழலை​யும் உரு​வாக்​கு​வ​தாக மத்​திய தொழிலா​ளர் நலத்​துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​டவியா கண்டித்​திருந்​தார். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலை​யில், இதுதொடர்​பாக பிளிங்​கிட், ஜெப்​டோ, ஸ்விக்​கி, சோ​மாட்​டோ போன்ற முன்​னணி நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​கள் மத்திய அரசு அதி​காரி​களை சந்​தித்து பேச்​சு​வார்த்தை நடத்​தி​ உள்ளனர். அப்போது, 10 நிமிட டெலிவரி வாக்​குறுதி திட்​டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், ஆன்​லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் 10 நிமிட வாக்குறுதி திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்​துள்​ளன. பிளிங்​கிட் நிறு​வனம் மத்​திய அரசின் அறி​வுறுத்​தலின் பேரில் ஏற்​கெனவே தனது விளம்​பரங்​களி​ல் இருந்து 10 நிமிட டெலிவரி வாக்​குறு​தியை நீக்​கி​விட்​டது. வரும் நாட்​களில் மற்ற ஆன்​லைன் உணவு டெலிவரி நிறு​வனங்​களும் இதைப் பின்​பற்​றும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

நல்ல ஊதி​யம் மற்​றும் வேலை நிலை​மை​களைக் கோரி தற்காலிகப் பணி​யாளர்​கள் பல நாட்​களாகப் போராடி வந்த நிலை​யில் நிறு​வனங்​களின் இந்த முக்​கிய அறி​விப்பு வெளி வந்​து உள்​ளது. 10 நிமிட டெலிவரி வாக்குறு தியை குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதற்கு டெலிவரி தொழிலாளர்கள் சங்கம் நேற்று வரவேற்பு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT