இந்தியா

டெல்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஹரியானா அல் பலா பல்கலை.யில் இருந்து 10 பேர் தலைமறைவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அல் பலா பல்கலைக்கழகத்​தில் இருந்து 3 காஷ்மீரி​கள் உட்பட 10 பேர் தலைமறை​வாகி உள்​ளனர். அவர்​களை தேடும் பணி​யில் டெல்​லி, ஹரி​யானா மற்​றும் ஜம்​மு-ஷாமீர் போலீ​ஸார் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

டெல்லி குண்​டு​வெடிப்​புக்​குப் பிறகு ஹரி​யானா பரி​தா​பாத்​தின் அல் பலா பல்​கலைக்​கழகம் விசா​ரணை அமைப்​பு​களின் தீவிர கண்​காணிப்​பின் கீழ் வந்​துள்​ளது. இப்​பல்​கலைக்​கழகத்​தில் டெல்​லி, ஹரி​யா​னா, ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸாருடன் தேசி​யப் புல​னாய்வு முகமை​யும் (என்​ஐஏ) விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதில், பல்​கலை​.யில் பணி​யாற்​று​பவர், மாணவர் என 10-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் தலைமறை​வாகி உள்​ளனர். இவர்​களில் 3 காஷ்மீரி​களும் அடக்​கம். இவர்​களது கைப்​பேசிகள் அனைத்​தும் தற்​போது அணைத்து வைக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது.

தலைமறை​வானவர்​களை காவல்​துறை​யினர் தேடி வரு​கின்​றனர். இவர்​களில் பலர் தீவிர​வாத நடவடிக்​கைகளு​டன் தொடர்​பில் இருந்​திருக்​கலாம் என சந்​தேகிக்​கப்​படு​கிறது.

இவர்​களில் பொது மருத்​து​வத்​ துறை​யில் பணி​யாற்றி வந்த மருத்​து​வர் நிஸார் டெல்லி கார் குண்​டு ​வெடிப்​பிற்கு காரண​மான உமருக்கு நெருக்​க​மானவர் என கூறப்படுகிறது. இவர்​கள் இரு​வரும் நடத்​திய வகுப்​பு​களில் 10 எம்​பிபிஎஸ் மாணவர்​களும் என்​ஐஏ​வின் விசா​ரணை வளை​யத்​தில் சிக்​கி​யுள்​ளனர். இவர்​களது கைப்​பேசிகளை என்ஐஏ தீவிர​மாக ஆராய்ந்து வரு​கிறது.

மேலும் தீவிரவாத செயலில் தொடர்பு இல்லாத பலர் அல் பலா மருத்​து​வக் கல்​லூரியி​லிருந்து விலகி வேறு நிறு​வனங்​களில் இணைந்து விட்​ட​தாக​வும் கூறப்படுகிறது. இதனால், அல் பலா கல்​லூரி​யில் மருத்​து​வர்​கள் பற்​றாக்​குறை ஏற்​பட்​டு, நோயாளி​கள் பாதிப்​புக்கு ஆளாகி உள்​ளனர்.

அல் பலா பல்​கலைக்​கழகத்​தின் நிறு​வனரும் வேந்​தரு​மான ஜாவத் அகமது சித்​திக்கை கைது செய்த அமலாக்​கத்​துறை 13 நாட்​கள் காவலில் எடுத்து விசா​ரித்து வரு​கிறது.

கடந்த பல ஆண்​டு​களாக இந்த கல்வி நிறு​வனம் மாணவர்​களை தவறாக வழிநடத்தி உள்​ள​து தெரியவந்துள்​ளது.

கடந்த 2014-15 முதல் 2024-25 வரையி​ல் இப்பல்​கலைக்​கழகம் கோடிக்​கணக்​கான ரூபாய் வரு​வாய் ஈட்​டி​யுள்​ளதும் தெரிய​வந்​துள்​ளது. வரு​மான வரி தாக்​கலின்​படி, 2014-15 மற்​றும் 2015-16 நிதி​யாண்​டு​களில் முறையே ரூ.30.89 கோடி மற்​றும் ரூ.29.48 கோடி தன்​னார்வ பங்​களிப்​பு​களாகக் காட்​டப்​பட்​டுள்​ளன.

இதே​போன்ற அதி​கத் தொகையை 2016-17-க்​குப் பிறகு இது நேரடி​யாக வரு​மான​மாக​வும், கல்வி வரு​வா​யாக​வும் காட்​டத் துவங்கி உள்​ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.415.10 கோடி. உண்​மை​யில் அப்​பல்​கலை​.யின் வரு​மானம் அதை விடப் பல மடங்கு அதி​க​மாக இருக்​கும் என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

குண்​டு​வெடிப்​பிற்கு பின் டெல்லி காவல்​துறை​யின் வழக்​குப்​ப​தி​விலிருந்து அமலாக்​கத்​துறை தன் விசா​ரணை​யைத் துவக்​கியது. இப்​போது, அல் பலா மீது பணமோசடி கோணத்​தி​லும் விசா​ரித்து வரு​கிறது. முக்​கிய​மாக வேந்​தர் ஜாவத்​துக்கு அரபு நாடு​கள் பலவற்​றுடன் நெருக்​க​மான தொடர்​பு​கள் இருந்​துள்​ளன. இதன் பின்​னணி என்ன என்​பது குறித்​தும் என்ஐஏ விசா​ரித்து வரு​கிறது.

இதனிடையே, இந்​தி​யா​வின் சமூக வலை​தளங்​களில் தீவிர​வாதம் பரப்​பும் பல்​வேறு வகை​யான காட்​சிகள் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன. இதனை கடந்த இரண்டு நாட்​களாக என்ஐஏ கண்​டறிந்து நீக்க நடவடிக்கை எடுத்​துள்​ளது. இந்த காட்​சிகளில், ஜம்​மு-​காஷ்மீரின் பூஞ்ச்​,ரஜோவ்​ரி உள்ளிட்ட மாவட்​டங்​களின் இளைஞர்​கள் குறி வைக்​கப்​பட்​டுள்​ளனர்.

இப்​ப​திவு​கள் அனைத்​தும் துபாய், பாகிஸ்​தான் மற்​றும் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரிலிருந்து பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன.

SCROLL FOR NEXT