சுற்றுச்சூழல்

வருங்காலத்தில் மனிதர்கள் குடிப்பதைவிட அதிக தண்ணீர் ஏஐ-க்கு தேவைப்படும்: ஐ.நா. பல்கலைக்கழக அறிக்கையில் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வருங்​காலத்​தில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்​துக்கு மனிதர்​கள் குடிப்​ப​தை​விட அதிக தண்​ணீர் தேவைப்​படலாம் என ஐ.நா. பல்​கலைக்​கழக அறிக்கை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

ஐ.நா. பல்​கலைக்​கழகத்​தின் தண்​ணீர், சுற்​றுச்​சூழல் மற்​றும் ஆரோக்​கி​யத்​துக்​கான நிறு​வனம் சமீபத்​தில் வெளி​யிட்​டுள்ள ஆய்​வறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

ஏஐ என்​பது வெறும் டிஜிட்​டல் தொழில்​நுட்​பம் மட்​டுமல்ல. இது தரவு மையங்​கள், மேம்​பட்ட கணினி சில்​லுகள், குளிரூட்​டும் அமைப்​பு​கள் மற்​றும் ஆற்​றல் உள்​கட்​டமைப்​பு​கள் ஆகிய​வற்​றின் பரந்த அளவி​லான இயற்​பியல் வலைப்​பின்​னலைச் சார்ந்​துள்​ளது. இவை அனைத்​தும் சுற்​றுச்​சூழலில் குறிப்​பிடத்​தக்க பாதிப்​பு​களை ஏற்​படுத்​துகின்​றன. குறிப்​பாக, வரும் 2030-ம் ஆண்டு இறு​திக்​குள் ஏஐயின் அதிவேக வளர்ச்​சி, வரலாறு காணாத அளவில் தண்​ணீர் நுகர்​வு, மின்​சார தேவை மற்​றும் நிலப் பயன்​பாடு ஆகிய​வற்றை அதி​கரிக்​கக் கூடும்.

ஏஐ அமைப்​பு​களை இயக்​கும் தரவு மையங்​களுக்கான தண்ணீர் தேவை 2030-க்​குள் 130 கோடி இந்​தி​யர்​கள் பயன்படுத்தும் தண்​ணீர் அளவை மிஞ்சக்கூடும்.

மேலும், ஏஐ சார்ந்த தரவு மையங்​கள் 2030-ம் ஆண்​டுக்​குள் ஆண்​டு​தோறும் 945 டெரா​வாட் மணி நேர மின்​சா​ரத்​தைப் பயன்​படுத்​தக் கூடும். இது பாகிஸ்​தான், வங்​கதேசம் மற்​றும் நைஜீரியா ஆகிய நாடு​களின் ஒட்​டுமொத்த வரு​டாந்​திர மின்​சா​ரப் பயன்​பாட்டை விட கிட்​டத்​தட்ட 3 மடங்கு அதி​க​மாகும்.

ஏஐ வளர்ச்​சியை நிறுத்த முடி​யாது. அதற்​குப் பதில் புது​மை​களைப் படைப்​ப​துடன் தண்​ணீர், நிலம் மற்​றும் ஆற்​றல் மீதான தாக்​கங்​களை​யும் கருத்​தில் கொள்​ள வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT