சுற்றுச்சூழல்

நெகிழிக்கு மாற்றாக மூங்கில் பொருட்களை பயன்படுத்த உடுமலை கைவினைஞர்கள் வேண்டுகோள்

எம்.நாகராஜன்

உடுமலை: விவ​சாயப் பணி​களில் பிளாஸ்​டிக் பொருட்​களின் ஆதிக்​கத்தை குறைத்​து, சூழலுக்கு உகந்த மூங்​கில் பொருட்களுக்கு விவ​சா​யிகள் மீண்​டும் முக்​கி​யத்​து​வம் அளிக்க வேண்​டும் என உடுமலை மூங்கில் கூடை உற்​பத்​தி​யாளர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

திருப்​பூர் மாவட்​டம் உடுமலை மற்​றும் அதன் சுற்​று​ வட்​டாரப் பகுதி​களில், விதை தூவுதல், விளைபொருட்​களை சேகரித்​தல், தானியங்​களை சுத்​தப்​படுத்​துதல் மற்​றும் தக்​காளி பழங்​களை சந்​தைக்​குக் கொண்டு செல்​லுதல் போன்ற வேளாண் தேவைகளுக்கு மூங்​கில் கூடைகள் அதி​கள​வில் பயன்​படுத்தப்பட்டு வந்​தன. ஆனால், சமீப​கால​மாக பிளாஸ்​டிக் பெட்டிகள் மற்​றும் நெகிழிப் பொருட்​களின் வரவால் மூங்கில் கூடை​களின் பயன்​பாடு வெகு​வாக குறைந்​தது.

இதனால், பாரம்​பரிய​மாக இத்​தொழிலில் ஈடு​பட்டு வந்த ஆயிரக்​கணக்​கான தொழி​லா​ளர்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டது.

இச்​ச​வால்​களுக்கு இடை​யிலும், தொழிலை கைவி​டாத உடுமலை கைவினைஞர்​கள், தற்​போதைய சந்தை தேவைக்கு ஏற்ப புதிய கலைப் பொருட்​களை​யும், வீட்டு உபயோக பொருட்​களை​யும் உற்பத்தி செய்து வரு​கின்​ற​னர்.

இதுகுறித்து மூங்​கில் தொழி​லா​ளர்​கள் கூறிய​தாவது: கூடைகள் தயா​ரிக்க தேவை​யான மூங்​கில்​கள் கிடைப்​ப​தில் சிக்​கல் நிலவுகிறது. கைவினைப் பொருட்​களை சந்​தைப்​படுத்​த​வும், கண்​காட்​சிகள் மற்​றும்

வணிக வளாகங்களில் விற்பனை செய்​ய​வும் அரசு தனி​யாக கடைகளை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும். பிளாஸ்​டிக் (நெகிழி) பயன்பாட்​டிற்கு மாற்​றாக விவ​சா​யிகள் மீண்​டும் மூங்​கில் கூடைகளை பயன்​படுத்த முன்​வந்​தால் மட்​டுமே எங்​கள் பாரம்​பரிய தொழிலும், வாழ்​வா​தா​ர​மும் பாது​காக்​கப்​படும். இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT