பனி​யில் இருந்து மலர்ச் செடிகளை பாது​காக்​கும் வகை​யில் பிளாஸ்​டிக் போர்வை போர்த்​த​ப்​பட்​டுள்​ளது.

 
சுற்றுச்சூழல்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் உறை பனியில் இருந்து பாதுகாக்க செடிகளுக்கு பிளாஸ்டிக் போர்வை

செய்திப்பிரிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் உறை பனியில் இருந்து பாதுகாக்க மலர்ச் செடிகளுக்கு பிளாஸ்டிக் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்​களுக்கு மேலாக நீல​கிரி மாவட்​டத்​தில் கடும் உறை பனிப்பொழிவு ஏற்​பட்டு வரு​கிறது. நேற்று ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் தட்​பவெப்​பநிலை 2.9 டிகிரி செல்​சி​யஸ் பதி​வானது.

கோடை சீசனில் மலர்க் கண்​காட்​சிக்​காக அரசு தாவர​வியல் பூங்​கா, தேயிலைப் பூங்​கா, ரோஜாப் பூங்கா உட்பட மாவட்​டத்​தில் தோட்​டக்​கலைத்துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள அனைத்து பூங்கா மற்​றும் நர்​சரி​களில் நாற்​றுகள் நடவு செய்​யும் பணி​கள் தொடங்​கி​யுள்​ளன.

தற்​போது பனி​யின் தாக்​கம் அதி​க​மாக இருப்​ப​தால், மலர் நாற்​றுகளைப் பாது​காக்​கும் பணி​யில் பூங்கா ஊழியர்​கள் ஈடு​பட்​டு உள்​ளனர். குறிப்​பாக, ஊட்டி அரசு தாவர​வியல் பூங்காவில் பனி​யின் தாக்​கம் எப்​போதும் அதி​க​மாக காணப்​படும்.

ஊட்டி தாவர​வியல் பூங்​கா​வில் வெண்​பனி மூடி காட்​சி​யளித்த புல்​வெளி

தற்​போது அலங்​காரத் தாவரங்​கள் மற்​றும் மலர்ச் செடிகளை பிளாஸ்​டிக் போர்​வையைக் கொண்டு ஊழியர்​கள் மறைத்து வரு​கின்​றனர். காலை, மாலையில் தொழிலா​ளர்​கள் தண்​ணீர் தெளித்து மலர்ச் செடிகளை, பனி​யில் கரு​காமல் காத்து வரு​கின்​றனர்.

பூங்​கா​வில் உள்ள புல் மைதானங்​கள், கரு​காமல் இருக்​கும் வகை​யில் ‘பாப் அப்’ ஸ்பிரிங்​லர் மூலம் தண்​ணீர் பாய்ச்​சப்​பட்டு பராமரிக்​கப்​பட்டு வரு​கிறது.

SCROLL FOR NEXT