குற்றாலத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை.

 
சுற்றுச்சூழல்

குற்றாலத்தில் தனித்துவிடப்பட்ட குட்டி யானை தாயுடன் இணைந்தது

செய்திப்பிரிவு

தென்காசி: தென்​காசி மாவட்​டம் குற்​றாலம் வனச்​சரகத்​துக்கு உட்​பட்ட வல்​லம் பகு​தி​யில் விவ​சாய நிலம் அருகே காயமடைந்த நிலை​யில் யானைக் குட்டி ஒன்று நின்​றிருந்​ததை வனத்​துறை​யினர் கண்​டறிந்​தனர். அதன் தாய் யானை காப்​புக்​காடு எல்லை அருகே இருப்​பது கண்​காணிக்​கப்​பட்​டதை தொடர்ந்​து, மீட்பு நடவடிக்​கைகளை வனத்​துறை மேற்​கொண்​டது.

கால்​நடை மருத்​து​வர்​களின் பரிசோதனை​யில், யானைக் குட்​டி​யின் வயிற்​றுப் பகு​தி, துதிக்கை மற்​றும் பின்காலில் காயங்​கள் மற்​றும் கடுமை​யான தொற்று இருப்​பதும், பின்​காலில் வீக்​கம் காணப்பட்​டதும் தெரிய​வந்​தது. எனவே சிகிச்சை அளிக்​கப்​பட்டது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவில் தாய் யானை மற்​றும் அதனுடன் வந்த மேலும் இரண்டு யானை​கள், யானை குட்​டியை அணுகி வெற்​றிகர​மாக மீண்​டும் கூட்​டத்​துடன் இணைத்​துச் சென்​றன. யானை​களின் குரல் ஒலிகள், காலடித்​தடங்​கள் மற்​றும் கள ஆய்​வின் மூலம் இந்த இணைப்பு உறுதி செய்​யப்​பட்​டது. களப்​பணி​யாளர்​கள் நேற்று மேற்​கொண்ட ஆய்​வில், யானை​கள் பாது​காப்​பாக வனப்​பகு​திக்​குள் சென்​றது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT