கோவை: கோவை குறிச்சி, சக்தி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளை நிறமுடைய சுமார் 5 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு நேற்றுமுன்தினம் புகுந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த தன்னார்வலர், பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வனத்துறையினர் மாங்கரை வனப்பகுதிக்குள் பாம்பை விடுவித்தனர். இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “இவ்வாறு வெள்ளை நிறத்தில் நாகப் பாம்பை காண்பது அரிது. தோல் நிறமி குறைபாடு காரணமாக அந்த பாம்பின் தோற்றம் அவ்வாறு உள்ளது”என்றனர்.