சுற்றுச்சூழல்

சிறவித் திட்டுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

செய்திப்பிரிவு

நீர்நிலைகளில் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஆதாரமான சிறவித் திட்டுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

பொதுவாக நதிகள் இயற்கையாக உருவாகும் போது, நீரானது நதியின் மத்தியில் திட்டுகளை உருவாக்கி விடும். இந்த திட்டுகளை சுற்றி நீர் ஓடும். திட்டு ஒரு சிறுதீவு போல் இருக்கும். அதில் நாளடைவில் மரம் செடி, கொடிகள் வளர, அங்கு பல உயிரினங்கள் பறவைகள் தங்க ஆரம்பித்துவிடும். இத்திட்டுகளே பல்லுயிர் பெருக்கத்துக்கு உயிர் ஆதாரமாக இருக்கின்றன. குளம், குட்டை போன்ற நீராதாரங்களை வெட்டும்போது, அவற்றின் மத்தியில் உயரமான பல திட்டுகளை முன்னோர்கள் அமைத்துள்ளனர்.

தற்போது குளத்தில், ஆற்றில் மண்ணை வெட்டி அள்ளியாதல் திட்டுகளே இல்லாம போய் விட்டன. பறவைகள் தங்க, உயிரினங்கள் மனித தொந்தரவு இன்றி வாழ, பல்லுயிர் பெருக்கத்துக்கு காரணியாக இருந்த சிறவி திட்டுகளை குளம், ஆறு, குட்டை போன்ற நீர் நிலைகளில் மீண்டும் அமைக்க முன்வர வேண்டும் என்று விக்கிரம சிங்கபுரம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறியதாவது: நீர் நிலைகளில் தற்போது இருக்கிற திட்டுகளை பாதுகாக்க வேண்டும். தவிர புதிய குளங்களை வெட்டி அமைக்கும் போதும், இருக்கிற குளங்களை தூர்வாரும் போதும் நீர் நிலைகளின் மத்தியில் சிறவித் திட்டுகளை அமைக்க வேண்டும். குளங்களின் நடுவே இவ்வகை திட்டுகளை அமைத்த பின்பு எக்காரணம் கொண்டும் அதை அழிக்க விடாமல் பாதுகாக்க வேண்டும். இவ்வகை சிறவித் திட்டுகள் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

SCROLL FOR NEXT