சென்னை: அரசு பணியில் உள்ள நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.13-ம் தேதி வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப். 18-ம் தேதி தொடங்கியது. பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களும் இடைநிலை ஆசிரியர்களும் ஆர்வத்தோடு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்தபடி, டெட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்று (10-ம் தேதி) முடிவடைகிறது.