சென்னை: திறந்தநிலை பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் பி.பார்ம், டி.பார்ம், பார்ம்.டி படிப்புகளில் சேரலாம். மத்திய, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே மருந்தியல் படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, மருந்தியல் கவுன்சில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற திறந்த நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்களும் பி.பார்ம், டி.பார்ம், பார்ம்.டி படிப்புகளில் சேரலாம் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், பெரும்பாலான கல்லூரிகளில் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்நிலையில், அறிவுறுத்தலை மீண்டும் வலியுறுத்தும் வகையில், அனைத்து மாநில அரசுகளுக்கும், மாநில மருந்தியல் கவுன்சில்களுக்கும் இந்திய கவுன்சில் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
அதில், விதிகளின்படி திறந்தநிலைப் பள்ளி மாணவர்களையும் இளநிலை மற்றும் பட்டய மருந்தியல் படிப்பில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.