கல்வி

பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வில் மாணவர்கள் விருப்ப பட்டியலில் பல கல்லூரிகளின் பெயர்களை சேர்க்கலாம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு பொறியியல் சேர்க்​கைக்​கான சிறப்​புக் கலந்​தாய்​வு, அரசுப் பள்​ளி​யில் படித்த மற்​றும் பொதுப் பிரி​வினருக்கு ஜூலை 13 முதல் 19 வரை நடை​பெற்​றது. இதன்​மூலம் 900 மாணவர்​கள் சேர்க்கை பெற்​றனர்.

இதைத் தொடர்ந்து நடை​பெற்ற பொதுப் பிரி​வினருக்​கான முதல் சுற்று கலந்​தாய்வு ஜூலை 20 முதல் 22 வரை நடந்​தது. இதில் 32,250 பேர் விருப்​பக் கல்​லூரி​களை தேர்வு செய்​தனர். அவர்​களில் 28,550 பேருக்கு தரவரிசை, கல்​லூரி​யில் உள்ள இடங்​கள், விருப்ப பட்​டியல் அடிப்​படை​யில் இடங்​கள் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை பெற்ற மாணவர்​கள், தங்​கள் விருப்​பத் தேர்​வில் குறிப்​பிட்​டுள்ள தமிழ்​நாடு பொறி​யியல் சேர்க்கை சேவை மையத்​துக்​கும் (TFC) இறுதி (Provisional) ஒதுக்​கீட்டு ஆணை பெற்​றவர்​கள் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்ள கல்​லூரிக்​கும் ஜூலை 30-ம் தேதிக்​குள் நேரடி​யாக சென்று அசல் சான்​றிதழ்​கள், கல்விக் கட்​ட​ணத்தை செலுத்தி சேர்க்கை பெற வேண்​டும்.

ஆன்​லைன் கலந்​தாய்​வில் மாணவர்​கள் தங்​கள் விருப்ப பட்​டியலில் எத்​தனை கல்​லூரி​களை​யும், எத்​தனை பாடப்​பிரிவு​களை​யும் சேர்த்​துக் கொள்​ளலாம். அவற்றை கையாளும் வகை​யில் திறன்​ மிகுந்த மென்​பொருள் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டின் கீழ் சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர் களிடம் எந்​த கட்​ட​ண​மும் வசூலிக்​கக்கூடாது; மாணவர்​களின் விவரங்​களைக் கொண்டு தவறான சேர்க்கை மேற்​கொள்​ளக் கூடாது என்று அனைத்து பொறி​யியல் கல்​லூரி​களுக்​கும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதை பின்​பற்​றாத கல்​லூரி​கள் மற்​றும் நடை​முறை​யில் வேறு புகார்​கள் ஏதேனும் தெரிய​வந்​தால், அதன் மீது விசா​ரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும். இது தொடர்​பான புகார்​களை tndote@tndote.com என்ற மின்​னஞ்​சலில் தெரிவிக்​கலாம் என்று தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநர் ரத்​தின​சாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT