கல்வி

அரசு பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் அரசுப் பள்​ளி​களில் மாணவர் சேர்க்கை நாளை தொடங்​கு​கிறது.

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யின்​கீழ் 37,554 அரசுப் பள்​ளி​கள் செயல்​படு​கின்​றன. இவற்​றில் 52 லட்​சம் மாணவ, மாணவி​கள் படிக்​கின்​றனர். அரசுப் பள்​ளிகளைப் பொருத்​தவரை, கோடை விடு​முறை முடிந்து ஜூன் மாதம் பள்ளி திறக்​கும் நாளில்​தான் மாணவர் சேர்க்கை தொடங்​கு​வது வழக்​க​மாக இருந்​தது.

          

இந்தச் சூழலில், மாணவர் சேர்க்​கையை அதி​கரிக்​கும் வித​மாக, கடந்த 2024-ம் ஆண்டு முதல், மார்ச் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்​கப்​படு​கிறது. இதற்கு பரவலாக பெற்​றோரிடம் நல்ல வரவேற்​பும் உள்​ளது.

இந்த நிலை​யில், அரசுப் பள்​ளி​களில் வரும் 2026-27 கல்வி ஆண்​டுக்​கான மாணவர் சேர்க்கை நாளை (மார்ச் 2) தொடங்க உள்​ளது. அதற்​கேற்பபள்​ளி​களில் உரிய முன்​னேற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. அங்​கன்​வாடி மையங்​களில் முன்​பரு​வக் கல்​வியை நிறைவு செய்​யும் 5 வயதுக்கு மேற்​பட்ட குழந்​தைகளை அருகே உள்ள அரசுப் பள்​ளி​களில் சேர்ப்​ப​தற்​கான நடவடிக்​கைகளும் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

‘அனைத்து அரசுப் பள்​ளி​களி​லும் மாணவர் சேர்க்கை விகிதம் கணிச​மான அளவில் அதி​கரிக்க வேண்​டும். அதற்​கேற்ப மாணவர் சேர்க்​கைக்​கான செயல்​பாடு​களை முன்​னெடுக்க வேண்​டும்.

அரசுப் பள்​ளி​களில் செயல்​படுத்​தப்​படும் எண்​ணும் எழுத்​தும், காலை உணவுத் திட்டம், ஸ்மார்ட் வகுப்​பறை​கள் உள்​ளிட்ட பல்​வேறு நலத் திட்​டங்​கள், உதவித் தொகைகள் குறித்து பெற்​றோரிடம் விழிப்புணர்வை ஏற்​படுத்​தி, மாணவர் சேர்க்கையை மேற்​கொள்ள வேண்டும்’ என்று அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித்​ துறை தரப்பில் உரிய அறி​வுறுத்​தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT