கல்வி

காஷ்மீரை சேர்ந்த ரூபிள் நாகிக்கு உலகின் சிறந்த ஆசிரியர் விருது: ரூ.9 கோடி ரொக்கப் பரிசு வழங்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் கடந்த 5ம் தேதி ‘உலக அரசுகளின் உச்சி மாநாடு - 2026’ நடை​பெற்​றது. இதில் இந்​தி​யா​வின் காஷ்மீரைச் சேர்ந்த ரூபிள் நாகி என்ற பெண், உலகின் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டார். அவருக்கு ஒரு மில்​லியன் டாலர் (சு​மார் ரூ.9 கோடி) பரிசு வழங்கப்பட்​டது.

ஐ.நா.​வின் யுனெஸ்கோ அமைப்​புடன் இணைந்து லண்​டனை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் ‘வர்கி அறக்​கட்​டளை’ ஆண்​டு​தோறும் சிறந்து ஆசிரியரைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவிக்​கிறது. அதன்​படி இந்த ஆண்டு விருது ரூபிள் நாகிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. ரூபிள் நாகி காஷ்மீரைச் சேர்ந்தவர். சமூக சேவகர், ஓவியக் கலைஞர், ஆசிரியர் என பன்முகத் ​தன்மை கொண்​ட​வர்.

          

‘ரூபிள் நாகி கலை அறக்​கட்​டளை’ ஒன்​றை​யும் நடத்தி வரு​கிறார். இந்​தி​யா​வில் உள்ள குடிசைப் பகு​தி​களில் குழந்​தைகளுக்கு கல்வி கற்​பிப்​பதை ஒரு இயக்​க​மாகவே நடத்தி வரு​கிறார். இந்​தி​யா​வில் இது​வரை 800-க்​கும் மேற்​பட்ட கல்வி மையங்​களை குடிசைப் பகுதி​களி​லேயே உரு​வாக்கி கல்வி கற்​பிக்​கிறார். அத்​துடன் சுவர் ஓவி​யங்​கள் மூலம் கல்​வியை புது​மை​யான முறை​யில் கற்பிக்கிறார்.

இது குறித்து ரூபிள் நாகி கூறும்​போது, ”எனக்கு கிடைத்த இந்த விருது, இந்​தி​யர்​கள் அனை​வருக்​கும் கிடைத்​தாக நினைக்​கிறேன். காஷ்மீரில் ஒரு பள்ளி தொடங்க வேண்​டும் என்​பது என்​பது எனது நீண்​ட ​நாள் கனவு. இப்​போது கிடைத்​துள்ள பரிசுப் பணத்​தில் அங்கு பள்ளி கட்​டு​வேன். அத்​துடன், இலவச​மாக தொழிற்​கல்வி மற்​றும் டிஜிட்​டல் கல்வி பயிற்சி அளிப்​ப​தற்​கான பயிற்சி நிறு​வனத்தை தொடங்​கு​வேன். இங்கு ஏழை குழந்​தைகள், இளைஞர்களுக்கு இலவச​மாகவே அனைத்து பயிற்​சிகளும் வழங்கப்​படும்” என்​றார்.

ரூபிள் நாகி சிறந்த ஓவியர். இவர் 850-க்​கும் மேற்​பட்ட ஓவி​யங்​கள், சிற்​பங்​களை உரு​வாக்கி உள்​ளார். அவை உலகள​வில் 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் காட்​சிப்​ படுத்​தப்​பட்​டுள்​ளன. குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் ஓவியக் கண்​காட்சி நடத்த அழைக்கப்பட்ட முதல் கலைஞர் ரூபிள் நாகி​தான். இவர் உலகளவில்​ பல்​வேறு விருதுகளை ஏற்​கெனவே பெற்​றுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT