சென்னை: பிளஸ் 1 தொழிற்கல்வி மாணவர்களுக்கான திறன் பயிற்சி நாளை நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு 2-ம் கட்ட திறன் பயிற்சி நாளை வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. அவை நிர்வாக காரணங்களால் தள்ளிவைக்கப்படுகிறது. பள்ளி திறந்த பின்னர் பயிற்சி நடைபெறும். இதற்கான நாள் பின்னர் தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.