கல்வி

பிளஸ் 1 தொழிற்கல்வி திறன் பயிற்சி தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 1 தொழிற்​கல்வி மாணவர்​களுக்​கான திறன் பயிற்சி நாளை நடை​பெற இருந்த நிலை​யில், நிர்​வாக காரணங்​களால் தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக் கல்வி இயக்​குநரகம் சார்​பில் முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கையில் கூறியிருப்பதாவது: அரசு மேல்​நிலை பள்​ளி​களில் தொழிற்​கல்வி பாடப்​பிரி​வில் பிளஸ் 1 பயிலும் மாணவர்​களுக்கு 2-ம் கட்ட திறன் பயிற்சி நாளை வழங்க திட்​ட​மிடப்​பட்​டிருந்​தது. அவை நிர்​வாக காரணங்​களால் தள்ளிவைக்கப்படுகிறது. பள்ளி திறந்த பின்​னர் பயிற்சி நடை​பெறும். இதற்​கான நாள் பின்​னர் தெரிவிக்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT