கல்வி

நீட் கட்டணத்தை திரும்ப பெற ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் நுழைவுத் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற ஜூன் 22 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கு ஏற்கெனவே செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 27-ம் தேதியுடன் நிறைவுப் பெற்றது. இந்த சூழலில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வரும் ஜூன் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அவர்களில் 13 லட்சம் பேர் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பித்து உள்ளனர். இதுவரை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in இணையம் வாயிலாக தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT