கல்வி

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் நடத்தி வரும் ‘எபிக்’ மையத்தை பார்வையிட்டு பாராட்டிய ஐஐடி இயக்குநர் காமகோடி

செய்திப்பிரிவு

சென்னை: சூரியஒளி மின்​சா​ரத்தை பயன்​படுத்​து​வ​தில் முன்​மா​திரி​யாக திகழ்ந்​து, மகளிர் குழுக்​களுக்கு தொழில் பயிற்சி வழங்​கி வரும் முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி சாந்​தஷீலா நாயரின் எபிக் மையத்​தை, ஐஐடி இயக்​குநர் காமகோடி பார்​வை​யிட்டு பாராட்​டி​னார்.

தமிழகத்​தில் எம்​ஜிஆர், ஜெயலலி​தா, மு.கருணாநிதி ஆகிய 3 ஆளு​மை​கள் முதல்​வர்​களாக இருந்​த​போது, அவர்​களு​டன் பணி​யாற்​றி ஓய்வு பெற்ற​வர் சாந்​தஷீலா நாயர்.

இவர், சோழிங்​கநல்​லூர் அடுத்த படூர் பகு​தி​யில், தனது தந்தை வாங்கி வைத்​திருந்த 33 சென்ட் பொட்​டல் காட்டை சீரமைத்​து, கடந்த 2021-ம் ஆண்டு எபிக் மைய​மாக (Eco Park Information Centre – EPIC) உரு​வாக்​கி​னார்.

அங்​கு, அப்​பகுதி மகளிர் குழுக்​களுக்கு சுற்​றுச்​சூழல் பாது​காப்​பு, மழைநீர் சேகரிப்​பு, இயற்கை உரம் தயாரிப்​பு, இயற்கை வேளாண்​மை உள்ளிட்டவை குறித்து களப்​ப​யிற்சி வழங்கி வரு​கிறார்.

அங்கு பல்​வேறு தாவரங்​களை இயற்கை முறை​யில் வளர்த்​து, ஒரு மரகத சோலை​யாக மாற்​றி​ உள்​ளார். இதனால், இந்த பகுதி ரம்​மிய​மாக காட்​சி​யளித்து வரு​கிறது. மேலும், பள்ளி மாணவ, மாண​வியரின் சுற்​றுச்​சூழல் விழிப்​புணர்வு மைய​மாக​வும் அது விளங்கி வரு​கிறது.

இந்த மையத்​தில் அடுத்த முன்​னெடுப்​பாக, சூரிய ஒளி மின்​சார பயன்​பாட்​டில் முன்​மா​திரி நடவடிக்​கைகளை மேற்​கொண்​டுள்​ளார். அதன்​படி, அங்கு சோலார் மின் விளக்​கு, வேளாண் பொருட்​களை சூரிய ஒளி​யில் உலர்த்​தும் இயந்​திரம், குடிநீரை கொதிக்க வைக்​கும் இயந்​திரம் உள்ளிட்டவை பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

மேலும், சுமார் 5 கே.​வி. திறன் கொண்ட சூரிய ஒளி பலகை​யும் அமைத்​து, மின் வாரிய பவர் கிரிட்உடன் இணைத்​துள்​ளார். இந்த சூரிய ஒளி பலகை தயாரிக்​கும் மின்​சா​ரம் உடனுக்​குடன் கிரிட்​டுக்கு போய்​விடும்.

அதன் பிறகு, இவர்​களின் தேவைக்கு கிரிட்​டிலிருந்து மின்​சா​ரத்​தை, அங்கு நடை​பெறும் பயிற்​சிகளுக்கு எடுத்து பயன்​படுத்​துகின்​றனர். இதில் இவர்​கள் உற்​பத்தி செய்​யும் மின்​சா​ரத்தை விட, பயன்​படுத்​தும் மின்​சா​ரம் மிக​வும் குறை​வாக இருப்​ப​தாக சாந்த ஷீலா நாயர் தெரி​வித்​தார்.

இந்த மையத்​தின் செயல்​பாட்​டை, சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி, தமிழக அரசின் மகளிர் மேம்​பாடு நிறுவன மேலாண் இயக்​குநர் சஜீவனா ஆகியோர் நேற்​று​முன்​தினம் பார்​வை​யிட்​டு, சாந்​தஷீலா நாயரின் முன்​னெடுப்பை பாராட்​டினர்.

அப்​போது, படூர் கிராமத்​தை​யும் சூரியஒளி மின்​சா​ரத்தை பயன்​படுத்​து​வ​தில் முன்​மா​திரி கிராம​மாக மாற்ற ஆலோ​சனை வழங்​கு​மாறு, படூர்​ ஊராட்​சி தலை​வி தா​ரா சுதாகர்​ வேண்​டு​கோள்​ விடுத்​தார்​.

SCROLL FOR NEXT