கோப்புப் படம்

 
கல்வி

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வகுப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அகில இந்​திய இன்​சூரன்ஸ் ஊழியர் சங்​கம், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி சார்​பில் வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்பிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது.

இத்​தேர்​வுக்கு அகில இந்​திய இன்​சூரன்ஸ் ஊழியர் சங்​க​மும், தமிழ்​நாடு தீண்​டாமை ஒழிப்பு முன்​னணி​யும் இணைந்து சென்​னை​யில் ஆகஸ்ட் 22 முதல் இலவச பயிற்சி வகுப்பை நடத்த உள்​ளன.

வகுப்​பு​கள் சென்னை பாரி​முனை அரண்​மனைக்​காரன் தெரு கச்​சாலீஸ்​வரர் ஆலயம் அருகே அக்​ரஹாரம் சந்​தில் அமைந்​துள்ள அம்​பேத்​கர் கல்வி மற்​றும் வேலை​வாய்ப்பு பயிற்சி மையத்​தில் நடை​பெறும்.

வாரம்​தோறும் சனி, ஞாயிற்​றுக்​கிழமை​களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திறமை​யான பயிற்​சி​யாளர்​கள் மூலம் வகுப்​பு​கள் நடை​பெறும்.

இப்​ப​யிற்சி வகுப்​பில், ஆதி திரா​விடர், பழங்​குடி​யின மாணவர்​கள், மற்​றும் பொருளா​தா​ரத்​தில் பின்​தங்​கிய ஏனைய வகுப்​பினரும் கலந்​து​கொள்​ளலாம்.

இங்கு பயிற்சி பெற்​றவர்​களில் 1300-க்​கும் மேற்​பட்ட தேர்​வர்​கள் மத்​தி​ய-​மாநில அரசு பணி​களில் சேர்ந்​துள்​ளனர்.

இந்த இலவச பயிற்சி வகுப்​பில் சேர விரும்​புவோர் 95665 23556, 90427 27276, 79045 22336, 94446 41712 ஆகிய எண்​களில் தொடர்​பு​கொண்டு உடனடி​யாக முன்​ப​திவு செய்​து​ கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT