கல்வி

இந்திய மாணவர்களுக்கு முழு நிதி உதவியுடன் ஜப்பானில் ஆராய்ச்சி வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: இந்​தியா, ஜப்​பான் இடையே பால​மாக செயல்​படும் ‘கே.சி.கன்​சல்​டிங் சர்​வீசஸ்’ (கேசிசிஎஸ்) அமைப்​பு, சகுரா அறிவியல் திட்​டம் மற்​றும் கல்​வி​சார் கூட்​டமைப்பு பயணங்​கள் மூலம் இரு நாடு​களுக்​கும் இடையி​லான சர்​வதேச அளவில் அங்கீகரிக்கப்​பட்ட கல்​விப் பரி​மாற்ற முயற்​சிகளை மேற்​கொள்ள உள்​ளது.

ஜப்​பான் அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப முகமை (ஜேஎஸ்​டி), சகுரா அறி​வியல் திட்​டத்​தின் கீழ் ஆதரிக்​கப்​படும் இந்த முயற்​சி, முழு நிதி​யுத​வி​யுடன் கூடிய திட்​ட​மாகும். இந்​திய ஆராய்ச்சி மாணவர்​களுக்​கான ‘லோட்​டஸ்’ நீண்​ட​கால ஆராய்ச்​சித் திட்டத்துக்​கான விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​வ​தாக ஜேஎஸ்டி அறி​வித்​துள்​ளது.

1,000 இந்​திய மாணவர்​களுக்கு இந்த வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது. இதற்கு விண்​ணப்​பிக்​கக் கடைசித் தேதி ஜூன் 9, 2026 ஆகும். இது குறித்து கேசிசிஎஸ் நிறு​வனரும் மேலாண்மை இயக்​குநரு​மான கருணாநிதி காசி​நாதன் கூறும்​போது, “கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்​தி​ய-ஜப்​பான் ஒத்​துழைப்பு மூலம் தமிழக மாணவர்​களுக்கு அறி​வியல் மற்​றும் ஆராய்ச்​சி​யில் சர்வதேச அனுபவத்தை வழங்​கு​வதே எங்​களின் நோக்​கம்" என்றார்.

SCROLL FOR NEXT