சென்னை: இந்தியா, ஜப்பான் இடையே பாலமாக செயல்படும் ‘கே.சி.கன்சல்டிங் சர்வீசஸ்’ (கேசிசிஎஸ்) அமைப்பு, சகுரா அறிவியல் திட்டம் மற்றும் கல்விசார் கூட்டமைப்பு பயணங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்விப் பரிமாற்ற முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை (ஜேஎஸ்டி), சகுரா அறிவியல் திட்டத்தின் கீழ் ஆதரிக்கப்படும் இந்த முயற்சி, முழு நிதியுதவியுடன் கூடிய திட்டமாகும். இந்திய ஆராய்ச்சி மாணவர்களுக்கான ‘லோட்டஸ்’ நீண்டகால ஆராய்ச்சித் திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஜேஎஸ்டி அறிவித்துள்ளது.
1,000 இந்திய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூன் 9, 2026 ஆகும். இது குறித்து கேசிசிஎஸ் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான கருணாநிதி காசிநாதன் கூறும்போது, “கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்திய-ஜப்பான் ஒத்துழைப்பு மூலம் தமிழக மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் சர்வதேச அனுபவத்தை வழங்குவதே எங்களின் நோக்கம்" என்றார்.