யுஜிசி 
கல்வி

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கல்வி மையங்​களில் மாணவர்​களின் பாது​காப்பை உறு​தி​செய்ய வேண்​டுமென கல்​லூரி​களுக்கு யுஜிசி உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து பல்​கலைக்​கழக மானியக்​குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்​.ஜோஷி, அனைத்து வித​மான உயர்​கல்விநிறு​வனங்​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்கை விவரம்: உயர்​கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்​பு, பணிபுரி​யும் பெண்​கள் மற்​றும் மாணவி​கள் மீதான பாலியல் துன்​புறுத்​தலைத் தடுக்க நடவடிக்​கை, குறைதீர்ப்​பாளர் நியமனம், கல்விக் கட்​ட​ணம் மற்​றும் அசல் சான்​றிதழ்​களை திரும்​பப் பெறு​தல் உள்​ளிட்ட வழி​காட்​டு​தல்​கள் தீவிர​மாகப் பின்​பற்​றப்பட வேண்​டும்.

          

குறிப்​பாக ராகிங் தடுப்​புக் குழு, குறைதீர்க்​கும் பிரிவு போன்ற பல்​வேறு குழுக்​கள் மற்​றும் பிரிவு​கள் அமைக்​கப்​படு​வதுடன், அவை திறம்பட செயல்​படு​வதை கல்​லூரி​கள் உறு​தி​செய்ய வேண்​டும். இந்​தக் குழுக்​கள் குறித்த விவரங்​களை உயர்​கல்வி நிறு​வனங்​கள் தங்​கள் இணை​யதளத்​தில் பதிவேற்ற வேண்​டும்.

இதுத​விர புகார்​கள் மற்​றும் குறை​களை குறிப்​பிட்ட காலக்கெடு​வுக்​குள் வெளிப்​படையான முறை​யில் சரிசெய்ய வேண்டும். மாணவர்​களுக்கு மனநல ஆலோ​சனை​கள் வழங்​குதலை மேம்​படுத்த வேண்​டும். சிசிடிவி கண்​காணிப்பு போன்ற வளாகப் பாது​காப்பு நடவடிக்​கைகளை உறு​தி​செய்ய வேண்​டும்.

இதுசார்ந்த அனைத்து துணைவேந்​தர்​களும் மேற்​கண்ட விதி​முறை​களைக் கண்​டிப்​பாகப் பின்​பற்​று​வதை உறு​தி​செய்​ய​வும் அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT