கல்வி

அரசு பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்: கல்வித் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: அரசுப் பள்​ளி​களில் 250 மாணவர்​களுக்கு ஓர் உயர்கல்வி வழி​காட்டி ஆசிரியர் இருக்க வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் 9 முதல் 12-ம் வகுப்பு வரையி​லான மாணவர்​களுக்கு உயர்​கல்வி குறித்த வழி​காட்​டு​தல்​களை வழங்​கி, சேர்க்​கையை உறுதி செய்​வதற்​காக, பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் ‘உயர்​கல்வி வழி​காட்டி திட்​டம்’ செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

இத்​திட்​டத்​தின்​கீழ் ஒவ்​வொரு அரசு உயர்​நிலை மற்​றும் மேல்​நிலைப் பள்​ளி​யிலும், வகுப்பு ஆசிரியர்​கள் உயர்​கல்வி வழி​காட்​டிகளாக நியமிக்​கப்​படு​கின்​றனர்.

கல்​லூரிக் கல்​வி, தொழிற்​கல்வி படிப்​பு​கள் மற்​றும் அதற்​கான நுழைவுத் தேர்​வு​கள் குறித்த தகவல்​களை அவர்​கள் மாணவர்​களுக்கு தெரிவிக்​கின்​றனர். பின்​தங்​கிய மற்​றும் சிறப்பு கவனம் தேவைப்​படும் மாணவர்​களைக் கண்​டறிந்​து, அவர்​கள் உயர்​கல்​வியைத் தொடர்​வதை உறுதி செய்​வதற்​கான நடவடிக்​கைகளை​யும் மேற்​கொள்​கின்​றனர்.

இந்​நிலை​யில், இத்​திட்​டம் தொடர்​பாக மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​களுக்கு மாதிரிப் பள்​ளி​கள் உறுப்​பினர் செயலர் இரா.சுதன் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: உயர்​கல்வி வழி​காட்டி திட்​டத்​தின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசுப் பள்​ளி​களில் உயர்​கல்வி வழி​காட்டி ஆசிரியர்​களை நியமிக்க தலைமை ஆசிரியர்​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டது. அந்த ஆசிரியர்​களின் பெயர்​களை ‘எமிஸ்’ தளத்​தில் பதிவு செய்​யு​மாறும் அறி​வுறுத்​தப்​பட்​டது.

ஜூன் 30-ம் தேதிக்குள்..

அனைத்து மாணவர்​களுக்​கும் உயர்​கல்வி பற்​றிய விழிப்​புணர்வு மற்​றும் தகவல்​கள் முழு​மை​யாக சென்​றடைந்​தால் மட்​டுமே அவர்​கள் உயர்​கல்வி தொடர்​வதை உறு​தி​செய்ய முடி​யும்.

இந்த இலக்கை அடைய ஏது​வாக, பள்​ளி​களில் ஏற்​கெனவே உள்ள வழி​காட்டி ஆசிரியர்​கள் ஒருங்​கிணைப்​பாளர்​களாக மாற்​றப்​பட்​டனர். அதனுடன், கூடு​தலாக 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையி​லான ஆசிரியர்​கள் உயர்​கல்வி வழி​காட்டி ஆசிரியர்​களாக​வும் நியமிக்​கப்​பட்​டனர்.

நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்​டில் உயர்​கல்வி வழி​காட்டி ஒருங்​கிணைப்​பாளர்​களில் யாரேனும் பணிபுரிந்த பள்​ளி​யில் இருந்து மாறு​தல் பெற விரும்​பி​னாலோ, ஓய்வு பெற்​றாலோ, பொறுப்​பில் இருந்து விலக விரும்​பி​னாலோ அவருக்கு பதிலாக, தகு​தி​யுள்ள மற்​றொரு ஆசிரியரை புதிய ஒருங்​கிணைப்​பாள​ராக நியமிக்க வேண்​டும்.

அதன்​படி, 250 மாணவர்​களுக்கு ஒரு​வர் என்ற விகிதத்​தில் உயர்​கல்வி வழி​காட்டி ஒருங்​கிணைப்​பாளர்​களை ஜூன் 30-ம் தேதிக்​குள் தேர்வு செய்​து, பள்ளி தலைமை ஆசிரியர்​கள் நியமிக்க வேண்​டும். இந்த விவரங்​களை ‘எமிஸ்’ தளத்​தில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT