கல்வி

ஆசிரியர்களுக்கு மனநல பயிற்சி: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: ஆசிரியர்​கள், பணி​யாளர்​களுக்கு ஆண்​டுக்கு 2 முறை மனநல நிபுணர்​களைக் கொண்டு கட்​டா​யம் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்​ளி​களுக்கு சிபிஎஸ்இ உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து அனைத்துப்பள்​ளி​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்கை: உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பின் அடிப்​படை​யில் அனைத்து பள்​ளி​களுக்​கும் மனநலம் மற்​றும் நல்​வாழ்வு மற்​றும் சமூக உணர்ச்சி கற்​றல் அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. அதன்படி பள்​ளி​ ஆசிரியர்கள், பணி​யாளர்​களுக்கு ஆண்டுக்கு 2 முறை மனநல நிபுணர்களை கொண்டு கட்​டாயப் பயிற்சிஅளிக்க வேண்​டும்.

          

இதில் மாணவர்களின் மனஅழுத்த அறிகுறிகளை கண்​டறிதல், முதலுதவி மனநல சிகிச்​சை, சுயபரிசோதனை மற்​றும் சரியான மருத்துவ ஆலோ​சனைக்கு வழிநடத்துதல், மாணவர்களிடம் எவ்வித பாகு​பாடின்றி கனி​வாக நடந்து கொள்​ளுதல் குறித்த பயிற்சி அதில் இடம்​பெற வேண்​டும்.

இதுத​விர ஆலோ​சனை குறித்த ஆண்​டறிக்​கையை பள்ளி நிர்​வாகம் தயார் செய்ய வேண்​டும். இதன் ரகசி​யம் பாது​காக்​கப்பட வேண்​டும். தனித்​தன்​மையை வெளிப்​படுத்​தும் வகை​யில் தேர்வு முறை​கள் அவ்​வப்​போது மதிப்​பாய்வு செய்​யவேண்​டும்.

SCROLL FOR NEXT