கல்வி

ஜேஇஇ பிரதான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்: மே 2 வரை அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னை: மே 17-ம் தேதி நடை​பெறும் ஜேஇஇ பிர​தானத் தேர்​வுக்​கான வி்ண்​ணப்ப பதிவு இன்று தொடங்​கு​கிறது. முதன்​மைத் தேர்​வில் வெற்றி பெற்ற மாணவர்​கள் மே 2-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்​கலாம்.

நாடு முழு​வதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலைப் படிப்​பு​களில் சேர, ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்​டும். இது முதன்​மைத் தேர்​வு, பிர​தானத் தேர்வு என 2 கட்​ட​மாக நடத்​தப்​படு​கிறது. 2026-ம் ஆண்​டுக்​கான முதன்​மைத் தேர்வு ஜனவரி, ஏப்​ரல் மாதங்​களில் நடத்தி முடிக்​கப்​பட்​டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்​களுக்​கான பிர​தானத் தேர்வு மே 17-ம் தேதி நடத்​தப்பட உள்​ளது.

இதற்​கான இணை​யதள விண்​ணப்ப பதிவு இன்று (ஏப்​.23) தொடங்​கு​கிறது. தகு​தி​யான மாணவர்​கள் https://jeeadv.ac.in இணை​யதளம் வாயி​லாக மே 2-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும். இந்த ஆண்​டில் இத்​தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்​துகிறது. காலை, மதி​யம் என 2 தாள்​களாக தேர்வு நடை​பெறும்.

இதில் தேர்ச்சி பெறு​பவர்​களுக்கு நாடு முழு​வதும் உள்ள 23 ஐஐடிக்​களில் சேர்க்கை இடங்​கள் கலந்​தாய்வு மூலம் ஒதுக்​கப்​படும். இதுபற்​றிய கூடு​தல் விவரங்​களை மேற்​கண்ட தளத்​தில் அறிந்து கொள்​ளலாம் என்று துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT