எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தேர்வெழுத வந்த மாற்றுத் திறனாளிகள்.படம்: எஸ்:சத்தியசீலன் 
கல்வி

சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு: வினாத்தாள் கடினம் என கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு, நாடு முழுவதும் 73 நகரங்களில் நேற்று நடந்தது. கேள்வித்தாள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

அதன்படி, நடப்பாண்டு சிவில் சர்வீஸ் இடங்களில் 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில், முதல்நிலை தேர்வெழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய 5 நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டது.

கடும் கட்டுப்பாடுகள்: காலை முதல்தாள் தேர்வும் (பொது அறிவு), மதியம் 2-ம் தாள் (திறனறிவு) தேர்வும் நடைபெற்றது. தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பலத்த பரிசோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு வினாத்தாள்கள் வழக்கத்தைவிட சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரி வித்தனர். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT