கல்வி

க்யூட் நுழைவுத் தேர்வுக்கு நாடு முழுவதும்: 13.99 லட்சம் பேர் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

சென்னை: மத்திய பல்கலை.களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு நாடு முழுவதும் 13.99 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறை கடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற உயர்கல்வி நிறுவனங்களும் க்யூட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளவும் பல்கலை. மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியது. அதன்படி நடப்பாண்டுக்கான க்யூட் தேர்வு மே 21 முதல் 31-ம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 10-ல் தொடங்கி மார்ச் 30-ம் தேதி நிறைவு பெற்றது. நாடு முழுவதும் சுமார் 13.99 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது கடந்தாண்டைவிட (9.9 லட்சம்) அதிகமாகும். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியிடப்படும்.

SCROLL FOR NEXT