க்ரைம்

ஆலங்குளம் அருகே கள் இறக்கியதை தடுத்த எஸ்ஐயை தாக்கிய இளைஞர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

செய்திப்பிரிவு

தென்காசி: ஆலங்​குளம் அருகே கள் இறக்​கியதை கண்​டித்​த​தால், காவல் உதவி ஆய்​வாளரை தாக்​கிய இளைஞர் துப்​பாக்​கி​யால் சுட்டு பிடிக்​கப்​பட்​டார்.

தென்​காசி மாவட்​டம், ஆலங்​குளம் அருகே உள்ள மருதம்​புத்​தூர் கிராமத்​தில் பனை மரத்​தில் இருந்து சட்​ட​விரோத​மாக கள் இறக்​குவதாக போலீஸாருக்குதகவல் கிடைத்ததால் ஆலங்குளம் காவல் உதவி ஆய்​வாளர் இசக்​கி​ராஜா நேற்று காலை​ அப்​பகு​திக்குச் சென்று சோதனை​யில் ஈடு​பட்​டார்.

          

அப்​போது, பனை மரத்​தில் இருந்து இறங்​கிய மருதம்​புத்​தூர் மேலத் தெரு​வைச் சேர்ந்த மணி​கண்​டன் (32) என்​பவரிடம், உதவி ஆய்​வாளர் விசாரணை நடத்​தி​னார். இதில் வாக்கு​வாதம் ஏற்​பட்டு ஒருவரையொரு​வர் தாக்​கிக் ​கொண்​டனர். இதனால், இசக்​கி​ராஜா தற்​காப்​புக்​காக தன்​னிடம் இருந்த துப்​பாக்​கி​யால் மணி​கண்​டனை காலில் சுட்​டுள்​ளார். இது குறித்த தகவலின்பேரில், ஏடிஎஸ்பி சங்​கர், காவல் ஆய்​வாளர் ஆடிவேல் மற்​றும் போலீஸார் விரைந்து வந்து, இரு​வரை​யும் தென்​காசி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். அங்கு அவர்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

தென்​காசி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் மணிவண்​ணன், மருத்​து​வ​மனைக்குச் சென்​று, உதவி ஆய்​வாளரிடம் நலம் விசா​ரித்​து, நடந்த சம்​பவங்​களை கேட்டறிந்தார். மருத்​து​வ​மனை​யில் பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. மோதலில் உதவி ஆய்​வாளர் துப்​பாக்கி​யால் சுட்ட சம்பவம் அந்தப் பகு​தியில் பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

SCROLL FOR NEXT