ரஞ்சன்

 
க்ரைம்

கும்மிடிப்பூண்டி | மயானத்தில் இளைஞர் கொலை: நண்பர் கைது

செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டி: திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள சாணாபுத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் ராஜா மகன் ரஞ்​சன்​(18).

நேற்று முன்​தினம் இரவு நண்​பர் ஒரு​வர் அழைத்​த​தாகக் கூறி வெளியே சென்றவர் நள்​ளிர​வாகி​யும் வீடு திரும்​பவில்​லை.

அவரது மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்​யப்​பட்​டிருந்​த​தால் உறவினர்​கள் பல்​வேறு இடங்​களில் ரஞ்​சனை தேடினர்.

இந்​நிலை​யில் நேற்று காலை சாணாபுத்​தூர் பகு​தி​யில் மயானத்​தில் சமாதி ஒன்​றின் மீது ரஞ்​சன் கொலை செய்​யப்​பட்டு கிடந்​தார்.

பாதிரிவேடு போலீ​ஸார், ரஞ்​சனின் உடலைக் கைப்பற்றி பொன்​னேரி அரசு மருத்து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும் வழக்​குப் பதிந்து சாணாபுத்​தூர் பகு​தி​யில் உள்ள கண்​காணிப்பு கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகளின் அடிப்​படை​யில் விசா​ரித்​து, ரஞ்​சனின் நண்​ப​ரான அதே பகு​தி​யைச் சேர்ந்த காமேஷ்(21) என்​பவரை நேற்று மாலை கைது செய்​தனர்.

காமேஷிடம் நடத்​திய விசா​ரணை​யில் தெரிய​வந்​த​தாவது: காமேஷும், ரஞ்​சனும் சாணாபுத்​தூர் மயானத்​தில் நேற்று முன்​தினம் இரவு மது அருந்​திக் கொண்​டிருந்​த​போதும் காமேஷின் மனைவி குறித்து ரஞ்​சன் தவறாக பேசி​ய​தாக கூறப்​படு​கிறது.

இதனால் ஏற்பட்ட கோபத்​தில் ரஞ்சனை காமேஷ், கொலை செய்​து​விட்டு தப்​பியோடி​யுள்​ளார் என்று போலீ​ஸார் கூறினர்.

SCROLL FOR NEXT