க்ரைம்

சென்னையில் பிஹார் குடும்பம் கொலை வழக்கு: இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பிஹாரைச் சேர்ந்த இளம்​பெண் உட்பட 3 பேர் கொலை வழக்​கில், இளம்​பெண் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட​வில்​லை, தலை​யில் இரும்பு கம்​பி​யால் அடித்​த​தால் ஏற்​பட்ட காயமே உயி​ரிழப்​புக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்​கை​யில் தெரிய வந்துள்​ளது.

பிஹார் மாநிலம் ஷேக்​பூரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கவுரவ் குமார்​(24). இவர் தனது மனைவி முனிதா குமாரி (20) மற்​றும் 2 வயது மகன் பிர்​மானி குமார் ஆகியோ​ருடன் வேலை தேடி சென்னை வந்​தார். இந்​நிலை​யில், கடந்த 26ம் தேதி, அடை​யாறு இந்​திரா நகர் பகு​தி​யில் சாக்கு மூட்​டை​யில் ரத்​தக் காயங்​களு​டன் கவுரவ் குமாரின் உடல் கண்​டெடுக்​கப்​பட்​டது.

          

இந்​தக் கொலை தொடர்​பாக அடை​யாறு போலீ​ஸார் தீவிர விசாரணை நடத்​தி, பிஹாரைச் சேர்ந்த சிக்​கந்​தர் (எ) சத்​யேந்​தர்​(30), லலித் யாதவ்​(40) மற்​றும் விகாஷ் குமார்​(24) ஆகிய 3 பேரைக் கைது செய்​தனர். விசா​ரணை​யில், அவர்​கள் கவுரவ் குமாரை மட்டுமின்​றி, அவரது மனைவி மற்​றும் 2 வயது குழந்​தையை​யும் கொலை செய்து வெவ்​வேறு இடங்​களில் வீசி​யது தெரிய​வந்​தது.

குழந்​தை​யின் உடல் மத்​திய கைலாஷ் ரயில்வே பாலம் அருகேயுள்ள பக்​கிங்​ஹாம் கால்​வா​யில் கண்​டெடுக்​கப்​பட்​டது. மனைவி முனிதா குமாரி​யின் உடல் பெருங்​குடி குப்பை மேட்​டில் இருந்து 3 நாட்​களுக்​குப் பிறகு மீட்​கப்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட மூவரும் முனிதா குமாரியைப் பாலியல் வன்​கொடுமை செய்ய முயன்​றுள்​ளனர்.

அதைத் தடுக்க வந்த கணவர் கவுரவ் குமார் மற்​றும் அழுது கொண்​டிருந்த 2 வயது குழந்தை ஆகியோ​ரால் தங்​களது குற்​றம் வெளி​யில் தெரிந்​து​விடும் என்ற பயத்​தி​லும் மூவரை​யும் அடித்​துக் கொலை செய்​த​தாகக் கைதானவர்​கள் வாக்​குமூலம் அளித்​தனர். முனிதா குமாரி​யின் உடல் ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் மருத்​து​வக் குழு​வின​ரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், முனிதா குமாரி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட​வில்லை, பாலியல் துன்​புறுத்​தலுக்​கான தடயங்​கள் ஏது​மில்லை, தலை​யில் இரும்பு கம்​பியால் பலமாக தாக்​கப்​பட்​ட​தால் ஏற்​பட்ட காயமே அவரது உயி​ரிழப்​புக்​கு முதன்​மைக்​ காரணம்​ என்​பது​ தெரிய​வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT