க்ரைம்

சென்னை | நண்பர் வீட்டில் குளிர்பானம் குடித்த வேன் ஓட்டுநர் மர்ம மரணம்

செய்திப்பிரிவு

சென்னை: வியாசர்​பாடி ராஜீவ்​காந்தி நகரைச் சேர்ந்​தவர் கிளின்​டன் (25). வேன் ஓட்​டுந​ராக வேலை செய்து வந்​தார். மது போதைக்கு அடிமை​யாகி போதை மறு​வாழ்வு மையத்​தில் சிகிச்சை பெற்று வந்​ததாக கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் கிளின்​டன், சென்னை பெரம்​பூரில் உள்ள ரமணா நகரில் வசிக்​கும் நண்பர் பிர​சாந்த் வீட்​டுக்​குச் சென்​றுள்​ளார்.

          

அங்கு பிர​சாந்த், நண்​பருக்கு குடிக்க குளிர்​பானம் கொடுத்​துள்​ளார். அதை குடித்த கிளின்​டன் சிறிது நேரத்​திலேயே மயங்கி விழுந்​தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிர​சாந்த், நண்​பரை மீட்டு அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றார்.

அங்கு பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் கிளின்​டன் ஏற்​கனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர்.

தகவல் அறிந்து செம்​பி​யம் போலீ​ஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

கிளின்​டன் உயி​ரிழப்​புக்கு காலா​வ​தி​யான குளிர்​பானம் காரணமா அல்​லது இறப்​புக்கு வேறு காரணம் உள்​ளதா என போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதற்கிடையே,கிளின்​டன் மரணத்​தில் மர்​மம் இருப்​ப​தாக அவரது குடும்​பத்​தினர் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளனர்.

இதுகுறித்து, போலீ​ஸார் கூறுகையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்​னரே இறப்​புக்​கான உண்​மை​யான காரணம் தெரிய​வரும்​ என்​றனர்​.

SCROLL FOR NEXT