க்ரைம்

வேளச்சேரியில் மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வேளச்சேரி பேருந்து நிலை​யம் அரு​கே, சாலை​யோரம் 61 வயது மதிக்​கத்​தக்க மூதாட்டி ஒரு​வர் நேற்று உடலில் காயங்​களுடன் அதே பகு​தி​யில் மயங்கிகிடந்​தார்.

அப்​பகுதி மக்​கள் அவரை மீட்​டு, எழும்​பூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தனர். மருத்​து​வர்​கள் மூதாட்​டியை பரிசோ​தித்த போது, அவர் பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்​டது தெரிய வந்​தது. இதுகுறித்​து, அவர்​கள் வேளச்​சேரி போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, போலீ​ஸார் மருத்​துவமனைக்கு சென்று மூதாட்டியிடம் விசா​ரித்​த​தில், அவர் கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்யப்பட்​டது தெரிய வந்​தது.

இது தொடர்​பாக, வேளச்​சேரி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அப்​பகு​தி​யில் உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகள் மூலம் விசா​ரணை மேற்​கொண்​ட​தில், வடமாநிலத்​தைச் சேர்ந்த இளைஞர்​கள் 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இதுகுறித்​து, போலீ​ஸார் கூறுகை​யில், ‘பா​திப்​புக்​குள்​ளான மூதாட்டி சற்று மனநலம் பாதிக்​கப்​பட்​ட​வர். இந்​நிலையில், சம்​பவத்​தன்று வீட்டை விட்டு வெளி​யேறி வேளச்​சேரி பேருந்து நிலை​யம் பூங்கா பகு​தி​களில் சுற்​றித் திரிந்​துள்​ளார்.

அப்​போது, ஓட்​டலில் தொழிலா​ளி​யாக பணி​யாற்​றும் பிஹாரைச் சேர்ந்த மதப் (30) மற்​றும் ஆதில் (28) ஆகிய 2 பேர் குடி​போதை​யில் மூதாட்​டியை பாலியல் வன்​கொடுமை செய்தது தெரிய வந்​தது. இதுதொடர்பாக, இரு​வரை​யும் கைது செய்து விசா​ரித்து வரு​கிறோம்’’ என்​றனர்.

SCROLL FOR NEXT