க்ரைம்

சென்னை: வங்கியில் போலி நகையை அடகு வைத்த 2 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னையை அடுத்த திருமுல்லை வாயல், செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (27). இவர், சென்னை, கெல்லீஸ் பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வங்கிக்கு வந்த இரு நபர்கள் 15.4 கிராம் எடையுள்ள தங்க நகைகளை அடகு வைக்க கொடுத்தனர். அந்த நகைகளை மதிப்பீட்டாளர் குமரன் தீவிரமாகச் சோதனை செய்தபோது, அவை உண்மையான தங்கம் அல்ல என்பதும், செம்பு உள்ளிட்ட உலோகங்களின் மீது தங்க மூலம் பூசப்பட்ட போலி நகைகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, உடனடியாக தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தின் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர், வங்கிக்கு விரைந்து வந்து மோசடியில் ஈடுபட முயன்ற 2 பேரையும் கைது செய்தனர்.

அதில் அவர்கள் சென்னை கொண்டித்தோப்பை சேர்ந்த ராஜேஸ் திவார் சோனி (54) மற்றும் புளியந்தோப்பை சேர்ந்த தமிழ்ச் செல்வன் (48) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இதே பாணியில் பல்வேறு வங்கிகளில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

SCROLL FOR NEXT