க்ரைம்

சம்பள பாக்கியை தரும்படி கேட்ட வாகன ஓட்டுநரை சுவற்றில் மோதி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்

செய்திப்பிரிவு

சென்னை: ஆயிரம் விளக்கு பகு​தி​யைச் சேர்ந்த சந்​தோஷ் ஞானகு​மார் செங்​கல், மணல், ஜல்லி விற்​பனை செய்​யும் தொழிலில் ஈடு​பட்டு வந்​தார். அவருடன் சேர்ந்து மனோகர் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வந்​தார். இவர்​களிடம் மணி (60) என்​பவர் வாகன ஓட்​டுந​ராக பணி​யாற்றி வந்​துள்​ளார்.

சம்பள பாக்கி இருந்​த​தால் அந்த தொகை​யைக் கேட்டு கடந்த 2014 ஏப்​ரல் மாதம் சந்​தோஷின் அலு​வல​கத்​துக்கு சென்று முறை​யிட்ட ஓட்​டுநர் மணி​யை, சந்​தோஷ் ஞானகு​மாரும், மனோகரும் சேர்ந்து தங்ககாப்பு மற்​றும் கார் சாவி​யால் தாக்​கி​யும், சுவற்​றில் மோதி​யும் கொலை செய்​தனர்.

          

இதையடுத்​து, அவர்​கள் இரு​வரை​யும் ஆயிரம் விளக்கு போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்கு விசா​ரணை, சென்னை 4-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஆர்​.கே.பி.தமிழரசி முன்​பாக நடந்​தது.

அப்​போது, போலீ​ஸார் தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் டி.ரவிக்​கு​மார் ஆஜராகி வாதிட்​டார். இரு​வர் மீதான குற்​றச்​சாட்​டும் சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறி இரு​வருக்​கும் ஆயுள் தண்​டனை மற்​றும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்​தும் நீதிபதி தீர்ப்​பளித்​தார்.

SCROLL FOR NEXT