க்ரைம்

டெலிவரி ஊழியரிடம் கத்தி முனையில் ‘ஜிபே’ மூலம் பணம் பறித்த இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: டெலிவரி ஊழியரிடம் ‘ஜிபே’ மூலம் பணம் பறித்த இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். திருநெல்​வேலி மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் மனோ (24). பெருங்​குடி​யில் குடும்​பத்​துடன் வசிக்​கும் இவர் தனி​யார் நிறு​வனத்​தில் பொருட்​களை டெலிவரி செய்​யும் வேலை செய்து வரு​கிறார்.

இவர் கடந்த 16-ம் தேதி, வாடிக்​கை​யாள​ருக்கு பொருட்​களை டெலிவரி செய்ய தனது இருசக்கர வாக​னத்​தில், துரைப்​பாக்​கம், சீவரம் செல்வ கணபதி அவென்யூ 3-வது தெரு​வில் சென்று கொண்​டிருந்​தார்.

1,000 ரூபாய்: அப்​போது, அங்​கிருந்த 2 பேர் மனோவை வழிமறித்து கத்​தி​முனை​யில் பணம் கேட்டு மிரட்​டினர். அவர் இல்லை என தெரி​வித்​த​தால் சரமாரி​யாக தாக்​கி, அவரது செல்​போனை பிடுங்கி ‘ஜிபே’ மூலம் ஆயிரம் ரூபாயை பறித்​து​விட்டு தப்​பினர்.

இது குறித்து மனோ துரைப்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் ஜிபே மூலம் பணம் பறித்து தப்​பியது துரைப்​பாக்​கம், வேம்​புலி​யம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்த மோக​னகிருஷ்ணன் (24), பெருங்​குடி சவுந்​தர்யா நகரைச் சேர்ந்த தினேஷ்​பாபு (22) என்​பது தெரிய​வந்​தது. அவர்​கள் இரு​வரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

SCROLL FOR NEXT