பொன்னம்மாள், பழனி , துளசிதாஸ்

 
க்ரைம்

ஆவடி | நகை, பணத்துக்காக மூதாட்டியை கொன்ற 2 பேர் கைது

செய்திப்பிரிவு

ஆவடி: சென்​னை, அம்​பத்​தூர் அருகே உள்ள சூரப்​பட்​டு, துலுக்​கானத்​தம்​மன் கோயில் 7-வது தெரு​வைச் சேர்ந்​தவர் பொன்​னம்​மாள் (70). இவரது கணவர் தாமோதரன் சென்னை துறை​முகத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர்.

இத்​தம்​ப​திக்கு 6 மகள்​கள் உள்​ளனர். அவர்​கள் திரு​மண​மாகி குடும்​பத்​துடன் வெவ்​வேறு இடங்​களில் வசித்து வரு​கின்​றனர். பொன்​னம்​மாளின் கணவர் 2006-ம் ஆண்டு உயி​ரிழந்​த​தால், அவர் தனி​யாக வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று முன் தினம் இரவு 7.45 மணி​யள​வில் பொன்​னம்​மாள் வீட்​டுக்கு ஆட்​டோ​வில் வந்த 2 பேர், இரவு 8.45 மணி​யள​வில் திரும்பி சென்​றனர். சந்​தேகமடைந்த அக்​கம்​பக்​கத்​தினர் பொன்​னம்​மாள் வீட்​டுக்கு சென்று பார்த்​த​போது, பொன்​னம்​மாள், கை, கால்​கள் கட்​டப்​பட்டு முகம் கழுத்து பகு​தி​யில் காயங்​களு​டன் உயி​ரிழந்​தது தெரிய வந்​தது.

புதூர் போலீ​ஸார், பொன்​னம்​மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக சென்​னை, கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தொடர்ந்​து, பொன்​னம்​மாளின் 5-வது மகள் கெஜலட்​சுமி அளித்த புகாரின் பேரில் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து முதல் கட்ட விசா​ரணை நடத்​தினர்.

அதில், பொன்​னம்​மாள், சூரப்​பட்டு பகு​தி​யில் உள்ள தன் குடும்​பத்​துக்கு சொந்​த​மான ரூ.1.5 கோடி மதிப்​பிலான நிலத்தை விற்​பனை செய்ய ஏற்​பாடு செய்​து, ரூ.31 லட்​சத்தை முன் பணமாக பெற்​று, அதனை தன் 6 மகள்​களுக்கு தலா ரூ.5 லட்​சம் என, பிரித்து கொடுத்​து​விட்டு மீதி பணத்தை தன் வங்​கிக் கணக்​கில் வைத்​திருந்​தது, தெரிய வந்​துள்​ளது.

இதையடுத்து நேற்று சூரப்​பட்டை சேர்ந்த செல்​வம், காஜாமொய்​தீன், மாதவன் ஆகிய பெயர்​களில் அழைக்​கப்​படும் நிலத்​தரக​ரான பழனி (44), வியாசர்​பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் துளசி​தாஸ் (51) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

பொன்​னம்​மாளும், பழனி​யும் ஒரே பகு​தி​யில் வசித்து வந்​துள்​ளனர். பொன்​னம்​மாளின் குடும்ப நிலத்தை விற்​ப​தற்கு பழனி இடைத்​தரக​ராக செயல்​பட்டு வந்​துள்​ளார். இதனால் பொன்​னம்​மாள், தன் குடும்ப நிலத்தை விற்​ப​தற்​காக முன்​பணம் பெற்​றதை அறிந்த பழனி, அப்​பணம் வீட்​டில் இருக்​கும் என்று நினைத்து அதனை கொள்​ளை​யடிக்க திட்​ட​மிட்​டுள்​ளார்.

ஆனால், நிலத்தை வாங்க இருந்​தவர், முன்​பணத்தை பொன்​னம்​மாளின் 6 மகள்​களுக்கு தலா ரூ.5 லட்​சம், பொன்​னம்​மாளுக்கு ரூ.1 லட்​சம் ரூபாய் என, அவர்​களின் வங்கி கணக்​கு​களில் செலுத்​தி​யுள்​ளார்.

இதனையறி​யாத பழனி, ரூ.31 லட்​சம் பொன்​னம்​மாள் வீட்​டில் இருக்​கிறது என, நினைத்து தன் நண்​ப​ரான துளசி​தாஸுடன் ஆட்​டோ​வில் பொன்​னம்​மாள் வீட்​டுக்கு வந்து அவரை கொலை செய்​துள்​ளார். ரூ.31 லட்​சம் பீரோ​வில் இல்​லாத​தால், பீரோ​வில் இருந்த ரூ.8 ஆயிரம், பொன்​னம்​மாள் அணிந்​திருந்த வளை​யல், கம்​மல்​கள் என, 4 பவுன் நகைகளை கொள்​ளை​யடித்​து​விட்​டு, இருவரும் தப்​பினர்.இவ்​வாறு விசா​ரணை​யில் தெரிந்​த​து.

மேலும், பழனி​யும், துளசி​தாஸும் பொன்​னம்​மாளை கொலை செய்து கொள்​ளை​யடித்த நகைகளை அடகு வைத்​து, ரொக்​க​மாக வைத்​திருந்த ரூ.1.19 லட்​சம், பொன்​னம்​மாள் வீட்​டில் கொள்​ளை​யடித்த ரூ. 8 ஆயிரம்​ என ரூ. 1.27 லட்​சத்​தை போலீ​ஸார்​ கைப்​பற்றியுள்ளனர்.

SCROLL FOR NEXT