சென்னை: சென்னையை சேர்ந்த சிறுமி கோடை விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். கடந்த 23-ம் தேதி வாக்குப்பதிவு நாளன்று வீட்டு முன்பு அந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (30), சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை அவர் மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் பயந்துபோன சிறுமி, சில நாட்கள் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில், நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், புகாருக்கு உள்ளான தவெக வட்டச் செயலாளரான தினேஷை போக்சோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.