பகவதி, புஷ்பராஜ், கலைச்செல்வன்
காஞ்சிபுரம்: படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாநடைபெற்று வருகிறது. விழாவின்போது ஒலிபெருக்கியில் பாடல் ஒலிபரப்புவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (27), நீலகண்டன் (27) ஆகிய இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொன்னேரிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து குற்றவாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த பகவதி (24), புஷ்பராஜ் (26), கலைச்செல்வன் (26) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைதான மூவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.