க்ரைம்

போக்சோ வழக்கை வாபஸ் பெற மிரட்டல்: பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமையாசிரியர் கைது

செய்திப்பிரிவு

பள்ளிப்பட்டு சந்தைப்பேட்டை சேர்ந்த செங்கல்வராயன் (60) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சநேய நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது அப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

'இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் செங்கல்வராயன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் புகார் தாரர் சிரஞ்சீவி, சாட்சியாக உள்ள ஜோதி இருவரும் நீதிமன்றம் செல்ல கடந்த 15-ம் தேதி பள்ளிப்பட்டில் பேருந்துக்காக காத்திருந்தபோது, அங்கு சென்ற செங்கல்வராயன் போக்சோ வழக்கில் பொய் சாட்சி சொல்லி வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாக, சிரஞ்சீவி புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த உதவி காவல் ஆய்வாளர் சிவா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட அவரை நேற்று மீண்டும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT