க்ரைம்

மாற்றுத் திறனாளி காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பம்: கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்டது அம்பலம்

செய்திப்பிரிவு

சென்னை: 2 மாதங்​களுக்கு முன்பு காணா​மல் போன மாற்​றுத் திற​னாளி வழக்​கில் திடீர் திருப்​ப​மாக அவர் கொலை செய்​யப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது. இது தொடர்​பாக இரு​வரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

திருநெல்​வேலி மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் மகேந்​திரன் (26). வாய் பேச முடி​யாத, காது கேளாத மாற்​றுத் திற​னாளி. இவர் சென்னை புழல் கேம்ப் பகு​தி​யில் தங்கி மாதவரத்​தில் உள்ள பிரபல ஜவுளிக் கடைகிடங்​கில் சுமை தூக்​கும் தொழிலா​ளி​யாக வேலை செய்து வந்​தார்.

          

கடந்த டிச.26 முதல் இவர் மாய​மா​னார். இது தொடர்​பாக புழல் காவல் நிலை​யத்​தில் உறவினர்​கள் புகார் அளித்​தனர். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து தேடி வந்​தனர். முதல் கட்​ட​மாக மகேந்​திரனுடன் வேலை செய்து வந்த திரு​வள்​ளூர் மாவட்​டம், புட்​லூரை சேர்ந்த லாரன்ஸ் (45) என்​பவரிடம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது.

இதில் போலீ​ஸாருக்கு எந்த துப்​பும் கிடைக்​க​வில்​லை. இந்​நிலை​யில், மாய​மான மகேந்​திரனின் செல்​போன் திரு​வள்​ளூர் மாவட்​டம், புட்​லூரில் செயல்​பாட்​டில் இருப்​பது போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்து புழல் போலீ​ஸார் அங்கு சென்று மற்​றொரு மாற்​றுத் திற​னாளி​யான (காது கேளாத வாய் பேச முடி​யாதவர்) வைத்​தி​ய​நாதன்​(40) என்​பவரைப் பிடித்து காவல் நிலை​யம் அழைத்​துச் சென்​று, சைகை மொழி​யில் பேசத் தெரிந்​தவர் துணை​யுடன் விசா​ரித்​தனர்.

அப்​போது பல திடுக்​கிடும் தகவல்​கள் வெளி​யானது. கொலைக்​கான காரணம் கொலை செய்​யப்​பட்ட மகேந்​திரன், கைது செய்​யப்​பட்ட லாரன்ஸ் இரு​வரும் ஒரே இடத்​தில் வேலை பார்த்து வந்​த​தால்நண்​பர்​களாகி உள்​ளனர்.

அடிக்​கடி ஒன்​றாகச் சேர்ந்து மது அருந்​தி​யுள்​ளனர். மேலும் லாரன்ஸ் வீட்​டுக்கு மகேந்​திரன் அடிக்​கடி சென்று வந்​துள்​ளார். அப்​போது லாரன்​ஸின் மாற்​றுத் திற​னாளி மனை​வி​யுடன் மகேந்​திரனுக்கு பழக்​கம் ஏற்​பட்டு இரு​வரும் நெருங்​கி​யுள்​ளனர்.

இதையறிந்த கணவரான லாரன்​ஸ், மனை​வியைக் கண்​டித்​துள்​ளார். ஆனால் அவர் கேட்​க​வில்​லை​யாம். இதனால் கணவன்​-மனைவி இடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்​டுள்​ளது. ஒரு கட்​டத்​தில் லாரன்ஸ் மனைவி அவரைப் பிரிந்து மகேந்​திரனுடன் புழலில் வீடு எடுத்து தனிக்​குடித்​தனம் நடத்​தி​னா​ராம்.

இதனால் ஆத்​திரமடைந்த லாரன்ஸ் தன் மனை​வியை அபகரித்​துச் சென்ற மகேந்​திரனை பழி​வாங்​கத் திட்​டம் தீட்​டி​யுள்​ளார். இதற்​கிடையே மகேந்​திரன் தனது மாற்​றுத் திற​னாளி அடை​யாள அட்​டையை திருநெல்​வேலி முகவரியி​லிருந்து சென்​னைக்கு மாற்ற முயற்சி மேற்​கொண்​டார். இதற்கு உதவுவ​தாக லாரன்ஸ் தானாக முன் வந்​துள்​ளார். மேலும், இரு​வரும் சமா​தான​மாகி விடு​வோம் என நடித்​துள்​ளார். இதை மகேந்​திரன் உண்மை என நம்​பி​யுள்​ளார்.

சம்​பவத்​தன்று தனது வீட்​டுக்கு வரும்​படி மகேந்​திரனை, லாரன்ஸ் அழைத்​துள்​ளார். அங்​கு, இரு​வரும் மது அருந்தி உள்​ளனர். கூடவே லாரன்​ஸின் நண்​பர் வைத்​தி​ய​நாதன் என்​பவரும் சேர்ந்து மது அருந்​தி​யுள்​ளார். அப்​போது லாரன்​ஸ், வைத்​தி​ய​நாதன் இரு​வரும் சேர்த்து மகேந்​திரனை தாக்​கி, கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீட்​டுக்​குப் பின்​புறம் உள்ள செப்​டிக் டேங்​கில் போட்டு மூடி​யுள்​ளனர்.

இவ்​வாறு கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் வாக்​குமூல​மாக அளித்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். மகேந்​திரனின் செல்​போனை வைத்​தி​ய​நாதன் எடுத்​துச் சென்று 2 மாதங்​களுக்​குப் பிறகு தற்​போது பயன்​படுத்​தத் தொடங்​கிய​தால் இந்த கொலைச் சம்​பவம்​ வெளிச்​சத்​துக்​கு வந்​துள்​ளது. மகேந்​திரனின்​ உடல் மீட்கப்பட்டது.

SCROLL FOR NEXT