க்ரைம்

மருத்துவமனையில் ரவுடி கொலை: எஸ்எஸ்ஐ, 4 போலீஸாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் ரவுடி கொலை செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், பணி​யில் கவனக்​குறை​வாக செயல்​பட்​ட​தாக எஸ்எஸ்ஐ மற்றும் 4 போலீ​ஸார் ‘சஸ்​பெண்ட்’ செய்​யப்​பட்​டனர்.

சென்னை கொளத்​தூர் மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்​தவர் ஆதி என்​கிற ஆதி​கேசவன்​(20). இவர் மீது கொலை, கொலை முயற்​சி, கொலை மிரட்​டல், அடிதடி உள்பட 9 வழக்​கு​கள் உள்​ளன. சென்னை காவல்​துறை​யின் ரவுடிகள் பட்​டியலில் ‘பி’ பிரி​வில் வைக்​கப்​பட்​டிருந்​தார்.

ஆதிக்​கும், ஆவடி ஏரிக்​கரைப் பகு​தி​யைச் சேர்ந்த 21 வயது இளம்​பெண் ஒரு​வருக்​கும் முறையற்ற உறவு இருந்​த​தாகக் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், அப்​பெண்​ணுக்கு கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் கடந்த மாதம் 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்​தது.

அந்த குழந்தை உடல்​நலக்​குறை​வால் கடந்த 11-ம் தேதி இறந்​தது. தகவலறிந்த ஆதி, துக்​கம் விசா​ரிப்​ப​தற்​காக அன்று இரவு கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்​குச் சென்​றார்.

பின்​னர் அங்​கிருந்த வில்​லி​வாக்​கம் பொன்​னாங்​கிணறு தெரு​வைச் சேர்ந்த தனது தோழி, மற்​றும் சிலருடன் மது​போதை​யில் பிரசவ வார்​டின் எதிர்​புறம் உள்ள தாழ்​வாரப் பகு​தி​யில் தூங்​கி​னார்.

தொடர்ந்து விசாரணை: இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் அதி​காலை அங்கு ஹெல்​மெட் அணிந்​த​படி வந்த கும்​பல் ஆதியை வெட்டி கொலை செய்​து​விட்டு தப்​பியது. இக்​கொலை தொடர்​பாக 8 பேரை கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸார் கைது செய்​தனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.

போலீஸ் மற்​றும் தனி​யார் காவலா​ளி​களை​யும் மீறி கொலை​யாளி​கள் அரசு மருத்​து​வ​மனை உள்ளே நுழைந்து ரவுடியைக் கொலை செய்​து​விட்டு தப்​பிய சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது.

இந்​நிலை​யில், கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை பணி​யில் கவனக்​குறை​வாக​வும், அஜாக்​கிரதை​யாக​வும் செயல்​பட்​ட​தாக சிறப்பு எஸ்ஐ ஸ்ரீதரன், முதல்​நிலை காவலர் நரேந்​திரன், பெண் காவலர்​கள் சரி​தா, அம்​பி​கா, நீலா​வதி ஆகிய 5 பேரை சஸ்​பெண்ட் செய்து சென்னை காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார்​.

SCROLL FOR NEXT