க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் செக்யூரிட்டி தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில், பாது​காப்பு பணி​யில் இருந்த தனி​யார் நிறுவன பாது​காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வண்​ணா​மலை மாவட்​டம், செய்​யாறை சேர்ந்​தவர் காந்தி கன்​னியப்​பன் (57). முன்​னாள் ராணுவ வீர​ரான இவர், தனி​யார் ஒப்​பந்த நிறு​வனம் மூலம், சென்னை விமான நிலை​யத்​தில் பாது​காவல​ராக கடந்த 7 ஆண்​டு​களாக பணி​யாற்றி வந்​தார்.

நேற்​று​முன்​தினம் இரவு அவர், சென்னை விமான நிலைய நிர்​வாக அலு​வல​கத்​தில் 2-வது தளத்​தில் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார். நேற்று காலை 6 மணிக்கு இவரை பணி மாற்​றம் செய்​வதற்​காக, மற்​றொரு காவலர் அங்கு வந்த போது, காந்தி கன்​னியப்​பன் இல்​லை.

அவரை தேடிய போது, அவர் அங்​குள்ள ஒரு அறை​யில் தூக்​கில் தொங்​கியபடி இறந்​துள்​ளார். இதுபற்றி தகவல் அறிந்​ததும், விரைந்து வந்த சென்னை விமான நிலைய போலீ​ஸார் மற்​றும் மருத்​துவ குழு​வினர் பரிசோதனை செய்து பார்த்த போது, அவர் உயி​ரிழந்​திருப்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, உடலை கைப்​பற்​றிய போலீ​ஸார் பிரேதப் பரிசோதனைக்​காக தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து தற்​கொலைக்​கான காரணம் குறித்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT