க்ரைம்

செல்போன்களை குறைந்த விலையில் தருவதாக நூதன மோசடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ​விலை உயர்ந்த செல்போன்களை குறைந்த விலை​யில் தரு​வ​தாக கூறி, நூதன பண மோசடி​யில் ஈடு​பட்ட மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்த ஒரே குடும்​பத்​தின் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் சத்​தி​ய​ராஜ் (31). பூந்​தமல்லி பகு​தி​யில் தங்​கி, கார் ஓட்​டுந​ராக வேலை செய்து வரு​கிறார். கடந்த 4-ம் தேதி மதி​யம், அண்​ணாநகர், வள்​ளி​யம்​மாள் கல்​லூரி தெரு​வில் காரில் ஓய்வு எடுத்​துக் கொண்​டிருந்​தார்.

அப்​போது, அங்கு குடும்​பத்​துடன் வந்த வடமாநிலத்​தைச் சேர்ந்த 4 பேர் குழந்​தைக்கு உடல்​நிலை சரி​யில்​லை. மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல அவசர​மாக பணம் தேவைப்​படு​கிறது.

எங்​களிடம் போதிய பணம் இல்​லை. எனவே, விலை உயர்ந்த இந்த புதிய செல்​போனை வைத்​துக் கொண்டு பணம் கொடுத்​தால் உதவி​யாக இருக்​கும் என கேட்​டுக் கொண்​டனர்.

அப்​போது, அங்கு குடும்​பத்​துடன் வந்த வடமாநிலத்​தைச் சேர்ந்த 4 பேர் குழந்​தைக்கு உடல்​நிலை சரி​யில்​லை. மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல அவசர​மாக பணம் தேவைப்​படு​கிறது.

எங்​களிடம் போதிய பணம் இல்​லை. எனவே, விலை உயர்ந்த இந்த புதிய செல்​போனை வைத்​துக் கொண்டு பணம் கொடுத்​தால் உதவி​யாக இருக்​கும் என கேட்​டுக் கொண்​டனர்.

விலை உயர்ந்த செல்​போன் குறைந்த விலை​யில் கிடைக்​கிறதே என ஆசைப்​பட்ட சத்​தி​ய​ராஜ் ரூ.12 ஆயிரம் கொடுத்து அந்த செல்​போனை வாங்​கிக் கொண்​டார். பின்​னர் மாலை​யில் வீடு சென்று செல்​போனை இயக்​கிப் பார்த்​த​போது அது இயங்​க​வில்​லை.

இதையடுத்து வீட்​டருகே உள்ள செல்​போன் கடைக்கு சென்று சோதித்​த​போது அது போலி​யான செல்​போன் என தெரிய​வந்​தது. அதிர்ச்​சி​யடைந்த அவர் இது தொடர்​பாக அண்ணா நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​த​தில், போலி​யான செல்​போனை கொடுத்து மோசடி​யில் ஈடு​பட்​டது மகா​ராஷ்டிர மாநிலத்​தைச் சேர்ந்த பாலு (49), அவரது மனைவி பிரமிளா பாய் (42), இவர்​களது மகன் பிர​வீன் (18), உறவினர் தன்​ராஜ் (27) என்​பது தெரிந்​தது.

தலைமறை​வாக இருந்த இந்த 4 பேரை​யும் நேற்று முன்​தினம் போலீ​ஸார் கைது செய்​தனர். இவர்​களிட​மிருந்து 26 போலி செல்​போன்​கள், 27 சார்​ஜர்​கள் மற்​றும் ரூ.9 ஆயிரம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

விசா​ரணை​யில் கைதான 4 பேரும் மும்​பையி​லிருந்து போலி செல்​போன்​களை வாங்கி வந்து அவசர தேவைக்​காக விலை உயர்ந்த செல்​போன்​களை குறைந்த விலை​யில் தரு​வ​தாக கூறி சென்​னை​யில் செல்​போன்​களை விற்று பண மோசடி​யில் ஈடு​பட்​டது தெரிந்​தது. இதையடுத்​து, 4 பேரும்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

SCROLL FOR NEXT