ஷாகுல் அமீது

 
க்ரைம்

கேளம்பாக்கம் மயானத்தில் நள்ளிரவில் பயங்கரம்: ஜாமீனில் வெளியே வந்த ரவுடி கொலை

செய்திப்பிரிவு

கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே மயானத்​தில், ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி தலை சிதைக்​கப்​பட்ட நிலை​யில் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

செங்​கல்​பட்டு மாவட்​டம், கேளம்​பாக்​கம் கே.எஸ்​.எஸ். நகர் அருகே உள்ள மயானத்​தில் இளைஞர் ஒரு​வர் கொலை செய்​யப்​பட்டு கிடப்​ப​தாக கேளம்​பாக்​கம் போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. கேளம்​பாக்​கம் உதவி ஆணை​யர் ஜான் விக்​டர், ஆய்​வாளர் தமிழன்​பன் உள்​ளிட்ட போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று விசா​ரணை நடத்​தினர்.

கொலை செய்​யப்​பட்​ட​வர் கேளம்​பாக்​கம் ஜோதி நகரைச் சேர்ந்த ஷாகுல் அமீது (27) என்​பது தெரிய​வந்​தது. அவர் மீது கொலை, கொள்​ளை, கொலை மிரட்​டல், செயின் பறிப்​பு, கஞ்சா விற்​பனை உள்​ளிட்ட 20-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் நிலு​வை​யில் இருப்​பதும், அவர் ‘கிரேடு-1’ ரவுடிகள் பட்​டியலில் இருந்​ததும் தெரிய​வந்​தது.

மேலும், கொளத்​தூரைச் சேர்ந்த முக்​கிய ரவுடி​யுடன் கூட்​டாளி​யாக இருந்து பல்​வேறு குற்​றச் சம்​பவங்​களில் ஈடு​பட்ட ஷாகுல் அமீது, பின்​னர் அவருடன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக பிரிந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

சிறை​யில் அடைப்பு

தொடர்ந்து கஞ்சா விற்​பனை​யில் ஈடு​பட்ட வழக்​கில் சுமார் 10 நாட்​களுக்கு முன்பு சிறை​யில் அடைக்​கப்​பட்ட அவர், கடந்த வெள்​ளிக்​கிழமை ஜாமீனில் வெளியே வந்​துள்​ளார். அவர் சனிக்​கிழமை மாலை 6.30 மணி​யள​வில் மயானத்​தில் நண்​பர்​களு​டன் அமர்ந்து மது அருந்​தி​யதை அப்​பகுதி மக்​கள் பார்த்​துள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

கேளம்​பாக்​கம் போலீ​ஸார் சடலத்​தைக் கைப்​பற்றி செங்​கல்​பட்டு அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும் சம்பவ இடத்​தில் இருந்த தடயங்​களைச் சேகரித்து விசா​ரித்​து, கொலை தொடர்​பாக தையூர், பாரதி நகர் பகு​தி​யைச் சேர்ந்த அருண் (31), தையூர் பாலமா நகர் பகு​தி​யைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (35), ஏகாட்​டூர் கங்​கை​யம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்த சூர்யா (32), கேளம்​பாக்​கம் ஜோதி நகரைச் சேர்ந்த அப்​துல் ரகு​மான் (25) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்​தனர்.

கொலைக்​கான காரணம் குறித்து அவர்​களிடம் ரகசிய இடத்​தில் வைத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். ​கொலை வழக்​கில் தொடர்​புடைய மற்​றொரு குற்​ற​வாளி​யான அஜய் என்​பவரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT