க்ரைம்

சென்னை | போலி பட்டா தயாரித்து ரூ.8 கோடி நிலம் மோசடி: ரியல் எஸ்டேட் அதிபர், மனைவி கைது

செய்திப்பிரிவு

சென்னை: ​போலி பட்டா மூலம் ரூ.8 கோடி மதிப்​புள்ள நிலத்தை மோசடி செய்​த​தாக ரியல் எஸ்​டேட் அதிபர், மனை​வி​யுடன் கைது செய்​யப்​பட்​டார். சென்னை மாதவரத்​தைச் சேர்ந்​தவர் சுந்​தரி (74).

இவருக்​குச் சொந்​த​மான ரூ.8 கோடி மதிப்​புள்ள 21.5 சென்ட் நிலம் மாதவரம் லோட்​டஸ் காலனி முதலா​வது தெரு​வில் உள்​ளது.

இந்த நிலத்தை, மாதவரத்​தைச் சேர்ந்த கார்த்​திக்​(36), அவரது தாயார் ராதா(56), அதே பகு​தி​யைச் சேர்ந்த ரியல் எஸ்​டேட் அதிபர் அருண் பிர​சாத்​(29) மற்​றும் அவரது மனைவி பிரதீ​பா(30) ஆகியோர் கூட்​டாக சேர்ந்து போலி பட்டா தயாரித்​துள்​ளனர்.

பின்​னர், அந்த போலி ஆவணங்​களைக் கொண்​டு, சுந்​தரி​யின் இடத்தை தங்​களது பெயருக்கு கிரையப் பத்​திரங்​களாக பதிவு செய்​துள்​ளனர். அது​மட்​டுமின்​றி, அந்த பத்​திரங்​களை ஒரு தனி​யார் நிதி நிறு​வனத்​தில் அடமானம் வைத்​து, பல லட்​சம் ரூபாய் பெற்று சொத்​தில் வில்​லங்​கத்​தை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளனர்.

இதுகுறித்து, நிலத்​தின் உரிமை​யாளர் சுந்​தரி, சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் அளித்​தார். அவரது உத்​தர​வின்​பேரில், மத்​திய குற்​றப்​பிரிவு கூடு​தல் காவல் ஆணை​யர் ராதி​கா, துணை ஆணை​யர் கீதாஞ்​சலி, உதவி ஆணை​யர் காயத்ரி தலை​மை​யில் மத்​திய குற்​றப்​பிரி​வின் போலி ஆவண புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரித்​தனர்.

இதில், கார்த்​திக், மாதவரத்​தில் உள்ள ஒரு சூப்​பர் மார்க்​கெட்​டில் வேலை செய்து வரு​வதும், அருண் பிர​சாத் ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​வதும், இவர்​கள் அனை​வரும் கூட்டு சேர்ந்து மூதாட்டியின் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள நிலத்தை போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்​ததும் உறுதி செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த கார்த்​திக், ராதா, அருண் பிர​சாத், பிரதீபா ஆகிய 4 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்த வழக்​கில் தொடர்​புடைய மேலும் சிலரை தனிப்​படை போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT