க்ரைம்

முறைகேடு புகாரில் புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: ​டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு மது​பானங்​கள் கொள்​முதல் செய்​த​தில் முறை​கேடு செய்​த​தாக எழுந்த புகாரின்​பேரில், புதுக்​கோட்டை மாவட்ட டாஸ்​மாக் மேலா​ளர் சி.கேசவன் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

டாஸ்​மாக் கடைகளில் அன்​றாடம் விற்​பனை​யாகும் மது​பானங்​களின் இருப்பு விவரங்​களின் அடிப்​படை​யில், கணினி மூலம் தானாகவே மது​பான ஆர்​டர்​கள் தயா​ராகும் நடை​முறை தற்​போது அமலில் உள்​ளது. இந்​தப் பட்​டியல் அந்​தந்த மாவட்ட மேலா​ளர்​களின் ஒப்​புதலைப் பெற்ற பின்​னரே, கடைகளுக்கு விநி​யோகம் செய்​யப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில், சி.கேசவன் தரு​மபுரி மாவட்ட டாஸ்​மாக் மேலா​ள​ராக பணி​யாற்​றிய​போது, தனக்கு சாதக​மான குறிப்​பிட்ட மது​பான உற்​பத்​தி​யாளர்​களுக்கு அதிக ஆர்​டர்​களை வழங்​கி​யுள்​ளார். இந்த முறைகேடு அண்​மை​யில் டாஸ்மாக் தணிக்கை துறை ஆய்​வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே, கடந்த வாரம்புதுக்​கோட்டை மாவட்ட டாஸ்​மாக் மேலா​ள​ராக கேசவன்பணி​யிட மாற்​றம் செய்யப்​பட்ட நிலை​யில், அவரை சஸ்பெண்ட் செய்து மேலாண்மை இயக்​குநர் கே.நந்​தகு​மார் ஜூலை 3-ல் உத்​தர​விட்​டார்.

SCROLL FOR NEXT