க்ரைம்

பரந்தூர் விமான நிலைய நில அளவைக்கு லஞ்சம்: நில அளவையரை கைது செய்து போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமைவெளி விமான நிலை​யத் திட்​டத்​துக்​காக நிலத்தை அளவீடு செய்ய ரூ.50,000 லஞ்​சம் வாங்​கிய நில அளவையரை காஞ்​சிபுரம் ஊழல் தடுப்பு கண்​காணிப்​புப் பிரிவு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த ரஞ்​சித் குமார் என்​பவருக்​குச் சொந்​த​மான நிலம் பரந்தூர் பகு​தி​யில் உள்​ளது. இந்​தப் பகுதி பசுமைவெளி விமான நிலை​யத் திட்​டத்​துக்​காக கையகப்​படுத்​தப்பட உள்ள நிலை​யில், தனது நிலத்தை அளவீடு செய்து தரு​மாறு ரஞ்​சித் குமார் விண்​ணப்​பித்​திருந்​தார்.

          

இதற்​காக, பரந்தூர் விமான நிலைய திட்ட நில எடுப்பு அலு​வல​கத்​தில் நில அளவைய​ராகப் பணி​யாற்றி வரும் சுந்தர வடிவேலு (46) என்​பவரை அவர் அணுகி​யுள்​ளார்.

நிலத்தை அளவீடு செய்ய சுந்தர வடிவேலு ரூ.50,000 லஞ்​சம் தரு​மாறு ரஞ்​சித் குமாரிடம் கேட்​டுள்​ளார். நிலத்தை அரசிடம் ஒப்​படைக்​கும் நிலை​யிலும் லஞ்​சம் கேட்​கப்​பட்​ட​தால் அதிர்ச்​சி​யடைந்த ரஞ்​சித் குமார், இது குறித்து காஞ்​சிபுரம் ஊழல் தடுப்பு கண்​காணிப்​புப் பிரிவு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார்.

போலீ​ஸாரின் அறி​வுறுத்​தலின்​படி, ரசாயனம் தடவிய ரூ.50,000 பணத்தை ரஞ்​சித் குமார் நேற்று காஞ்​சிபுரம் செங்​கழுநீரோடை வீதி​யில் உள்ள சூப்​பர் மார்க்​கெட் அருகே சுந்தர வடிவேலு​விடம் கொடுத்​துள்​ளார்.

அப்​போது அங்கு மறைந்​திருந்த ஊழல் தடுப்பு கண்​காணிப்​புப் பிரிவு டிஎஸ்பி கலைச்​செல்​வன், இன்​ஸ்​பெக்​டர்​கள் கீதா, தேவ​நா​ராயணன் மற்​றும் போலீ​ஸார், லஞ்​சப் பணத்தை பெற்ற சுந்தர வடிவேலு​வை கைது செய்​தனர். அவர் மீது துறைரீ​தி​யான நடவடிக்கை எடுக்க பரிந்​துரை செய்​தனர்.

SCROLL FOR NEXT