க்ரைம்

ஜவுளிக்கடை சென்றபோது இளம் பெண் தவறவிட்ட தாலி செயினை தேடிக் கொடுத்த போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னை: ஜவுளிக்​கடை சென்​ற​போது, இளம் பெண் தவற​விட்ட தாலி செயினை போலீ​ஸார் சிசிடிவி காட்​சிகள் மூலம் கண்​டெடுத்து கொடுத்​தனர். திருநெல்​வேலி மாவட்​டம், செய்​துங்​கநல்​லூர், மேற்கு பிள்​ளை​யார் கோயில் தெரு​வில் வசித்து வருபவர் நஸ்​ரின் (28).

இவர், உறவினர் இல்ல திருமண நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்​வதற்​காக சமீபத்​தில் கணவருடன் சென்னை வந்​தார். கடந்த 26-ம் தேதி மாலை உறவினர்​களு​டன் வண்​ணாரப்​பேட்​டை,எம்​.சி. சாலை​யில் உள்ள பிரபல ஜவுளிக்​கடை​யில் புது ஆடைகளை வாங்​கிக்கொண்டு அங்​கிருந்து வெளியே வந்​தார்.

5.5 பவுன் தாலிச் செயின்: பின்​னர் ஆட்​டோ​வில் ஏறி பழைய வண்​ணாரப்​பேட்​டை, பாண்​டியன் தியேட்​டர் அரு​கில் இறங்​கிய​போது, நஸ்​ரின் கழுத்​தில் இருந்த 5.5 பவுன் தாலிச் செயின் காணா​மல் போனது தெரிய​வந்​தது. அதிர்ச்​சி​யடைந்த அவர் இது தொடர்​பாக மறு​நாள் காலை வண்ணாரப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி, அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். முதல் கட்​ட​மாக நஸ்​ரின் சென்ற ஜவுளிக்​கடைக்​குச் சென்று விசா​ரணை செய்​து, அங்கு பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்​தனர். அப்​போது கடைக்கு வெளியே சாலை​யில் கிடந்த தாலிச்​செ​யினை ஒரு பெண் எடுத்​துச் செல்​வது தெரிய​வந்​தது.

அதன் பேரில் போலீ​ஸார் தீவிர விசா​ரணை செய்து சாலை​யில் கிடந்த தாலிச் செயினை கண்​டெடுத்த புளியந்​தோப்பு பகு​தி​யைச் சேர்ந்த பெண்ணை அடை​யாளம் கண்டு அவரிட​மிருந்து 5.5 பவுன் தாலிச் செயினை மீட்​டு நஸ்​ரினிடம்​ ஒப்​படைத்​தனர்​.

SCROLL FOR NEXT