வழிப்பறியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்.

 
க்ரைம்

சென்னையில் ஆட்டோவில் சென்று வழிப்பறி: 3 பேர் கும்பலை கைது செய்த போலீஸார்

செய்திப்பிரிவு

சென்னை: ஆட்​டோ​வில் சென்று வழிப்பறியில் ஈடு​பட்ட 3 பேர் கும்​பல் கைது செய்​யப்​பட்​டது. சென்​னை ஏழுகிணறு சந்தை பகு​தி​யில் வசிப்​பவர் கார்த்​திக் (38).

தொழிலா​ளி​யான இவர் நேற்று முன்​தினம் மதி​யம் ஏழுகிணறு, மின்ட் தெரு​வில் நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு ஆட்​டோ​வில் வந்த 3 பேர், கார்த்​திக்கை வழிமறித்து பணம் கேட்​டனர்.

அவர் கொடுக்க மறுத்​த​தால் சரமாரி​யாக தாக்கி அவரிட​மிருந்த பணம் மற்​றும் செல்​போனை பறித்​து​விட்டு தப்​பினர். அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஏழுகிணறு காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் கார்த்​திக்கை தாக்கி வழிப்பறி​யில் ஈடு​பட்​டது எருக்​கஞ்​சேரியைச் சேர்ந்த மணி​கண்​டன் (28), விசாசர்​பாடியைச் சேர்ந்த தனுஷ் (20), அதே பகு​தி​யைச் சேர்ந்த பிர​வீன்​காந்த் என்ற முத்து (21) என்​பது தெரிந்​தது.

இதையடுத்​து, தலைமறை​வாக இருந்த அவர்​களை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

SCROLL FOR NEXT